Friday, December 29, 2017

புத்தாண்டு 2018

உறங்கிய  உண்மைகள் விழித்தெழும் நாளில்,
உலகே ஒளியில் உற்சாகம் காணும்.
பலநாள் கனவுகள் பலித்திடும் வேளையில்,
பாதையின் தடைகள் பழங்கதை யாகும்.
தலைகள் எண்ணிட தலைமை தோன்றுமோ?
விலைக்கு வாங்கிய வாக்குகள் வெல்லுமோ?
போலிகள் போரில் வெல்வதும் தோற்பதும்,
வாய்மையின் வேலியைத் தாண்டிய தாழ்மையே.
புதியதோர் உலகம் புதுமையில் இல்லை;
நிறம்பல காணும் மனிதர்கள் இடையே,
மறைந்த பிறையை வளர்பிறை யாக்கி,
நிறைந்திடும் நன்மையில் புதுயுகம் காண்போம்!
                      எல்லோர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 
                                                                        ப.சந்திரசேகரன் .  

New Year Song

       

        








{Happy New Year 2018}

Time might run its course,day by day. 
The tick tick of Time is never to stay.
Our presence here,is not Time's concern. 
Our life moves the way we live and learn.

Though tickets are there for life's travel 
Time has its sealing, at the onward level.
The return recipe is a remembrance chart,
For revisiting stations that we left as past.

 Time does not specify our terminal station.
 And how we travel is our power and passion.
 Each one's itinerary is an individual diary,
 Subject to Time's unknown date of expiry.

 Make use of Time's ticket for all that is best
 To enjoy the essence of life,at Time's behest.
                                            P. Chandrasekaran.


Wednesday, December 27, 2017

அன்பு

அரசியல் பேசுகிறேன்!
அன்பை நாகரீகமாக்கி. 
ஆலயம் செல்கிறேன்!
ஆரிய திராவிட நிலைகளைக் கடந்து.
ஆண்டவனைத் தொழுகிறேன் !
ஆசாரங்களைத் துறந்து.

அனைத்து மதங்களையும் தாண்டி,
ஆன்மீகத்தில் ஆழாது,
அன்பினில் நிலைகொள்ளும்போது,
ஆண்டவனே ஆர்ப்பரிக்கக்கூடும்.
அன்புடன் வம்பு பேசுகையில்,
வம்பு வந்த வழி மறந்துபோகும்.

பொய்யான அன்பு,
புரியாத உறவுகளாய்,
போலியான நட்பாய்,
கால ஓட்டத்தில் காலாவதியாகும்.

பிறர்க்குமட்டுமே உரிய,
அடைக்கும் தாழில்லா அன்பே,
சரித்திரம் போற்றும் சமூகமாகும்.
                                        ப.சந்திரசேகரன்.

Saturday, December 23, 2017

சொல் தோழா

திருதிருவென விழிக்காதே!
இங்கே தமிழுக்கும் தமிழ் மண்ணின் வளர்ச்சிக்கும்,
பெரும் பங்கு வகித்தவர்க்கு  பெயர் தமிழினத் துரோகி;
உரைத் தூக்கி உலையில் போட்டவர்களுக்கு,
ஊர்ப்பணத்தில்  பணத்தில் இலவசங்கள் அள்ளிக் கொடுத்து,
ஊரின் வளர்ச்சியை  
கிடப்பில் போட்டவர்களுக்கு பெயர், தியாகி.
ஒரு சிலரின் ஊழல் கதைகளுக்குப் பின்னே,
ஊர் வளர்ச்சி இருந்தது;
ஆனால் வேறு பலரின் ஊழல் கதைகள்,
அவர்களை மட்டுமே, 
உயிர் பிரியும்வரை ஊராளச் செய்தது.   
வாரிசு இல்லாதவர்கள்,
மற்றவரின் வாரிசு அரசியல் பற்றி 
அனல் பறக்கப் பேசுவர்.
வாரிசு உள்ள வேறு சிலர்,
தன் வாரிசு வலம் வரும் நாளுக்கு ஏங்கி,
வலுவாக வேரூன்றிய,வேறு வாரிசு இயக்கங்களை ஏசுவர்.
தடம் புரண்டு திகைக்காதே!
இங்கே நடக்கும் அக்கிரமங்கள் அனைத்திற்கும் 
நீயே மூலகாரணம்!
உன்னையும் உன் வறுமையையும், பேராசையையும்,
உன் வாக்குச் சீட்டுக்கொண்டு விலைபேசும் வரையில்,
அதற்கு நீ விலைபோகும் வரையில்,
இங்கே எதுவுமே மாறப்போவதில்லை.
தமிழினத் துரோகியை,
உன் மனக்கண்ணாடியில் பார்!
அங்கே நீ தெரிவாய்! நீ மட்டுமே தெரிவாய்!  
                                                                                     ப.சந்திரசேகரன் .   

Thursday, December 21, 2017

Christmas Song { 2017}


Where is the light of life?
The candle says it is in the eyes of the Lord,
Sparkling incessantly with the starch of love.
Where is the substance called love?
The Christmas cakes and candles give the answer.
Love is born of sweetness and light,
Like the cakes given and the candles burnt.

The art of giving shall amply grow

From the gift hampers of the Santa claus.
Each one gives others,what they can and have.
Whoever gives love in the manner of Christ,
Shall bear or beat burdens, with beaming joy.
The joy of celebration, like the Christmas tree,
Gains mass and momentum, in a sharing glee.
                                       P. Chandrasekaran.












Friday, December 15, 2017

For a Post on Your Wall.

I posted my thoughts on your mind page.
But you did not bother to put a like status. 
You are not a Troy queen, nor me a Faustus;
'We receive what we give' is a known adage.

When what I express does not get displayed,
Nor allowed to get displayed,my words go,
As if written on the running  river's mad flow.
My web page words looked widely waylaid.

The river's arrogance withers once it gets dried. 
I will post my thoughts afresh on your sand mind,
To let your sterile self,sulk under a raging rewind.
I will mark all my thoughts and words as re-tried.

You might shoot water and fire, to close my roots;
Oh! my posts and your forces, are ever in cahoots.


                                                    P.Chandrasekaran.

Sunday, December 10, 2017

The Wish List.


Hush!
Silence is not just a sign of wisdom.
It is the harbinger of peace,winsome.
Push!
Not yourself in a crowd, for a rampage
But your live energy, for others' vantage.
Gush!
Not your views for you, to turn street smart
But your passion to inspire everyone's heart.
Rush!
Not for a move that aborts all that you want
But one that would make your rivals to daunt.
Flush!
The foul in you to die at the bottom most point
So that your soul gathers a sacred goal to anoint.
Crush!
The rebelling wedge between thought and deed
For it is the voice of conscience you should heed.
Wish!
To clear the track before you kick start your journey
So that what you do, does not turn out to be baloney.
                                                     P.Chandrasekaran.

Sunday, December 3, 2017

The Hearty Rhythms.

Your eyes spoke to me subtly, a silly lot.
But I was speaking straight to your heart.
Your heartbeat was hellbent not to listen;
My voice betrayed my emotions, broken .

The syllables of the language of the heart, 
Are sour to lips, letting out words as dart.
The wobble of the vacillating vocal cords,
Vitiates sounds,vexing the heart, as warlords.

The language of love is of a warbling tweet
Tuning whims and words into a cardiac beat.
Where eyes and ears waver to transmit love,
The beats of the heart, beckon a bonny alcove.

Love lets two hearts beat in syncopated rhythm,
One bettering the other like blood,in the system.
                                                P.Chandrasekaran.





Tuesday, November 28, 2017

திருத்தியபடி

அரக்கர்கள் ஆள அறமது வெல்லுமோ?
சுரப்பது அனைத்தும் பாலென் றாகுமோ?
விரக்தியை விதைக்கும் வேட்டையர் ஒன்றாய்,
இருக்கையில் அமர்ந்திட இதயம் பதைக்குமோ ?
நரித்தனம் செய்து நாணயம் புதைப்போர்
நிரப்பிடும் அணிகள் நிலைப்பது நிஜமோ?
உரைத்திடும் அவர்தம் உளறல்கள் கேட்டு
சிரித்தலும் நமக்கு சிந்தனைக் கேடே!

பிரித்து மேய்ந்திடும் பாவிகள் இடையே,
மருத்துவ மனைகளும் மர்ம தேசமே!
சரித்திர ஏட்டினில் சாயம் கலந்திடின்,
கரித்துகள் போன்ற களங்க மனைத்தையும்,
எரித்துச் சாம்பலாய், இழிநிலைக் களைந்து,
திருத்திய பதிவுகள் திறம்படத் தொகுப்போம் !
                                                  ப.சந்திரசேகரன் .  




Saturday, November 25, 2017

பொருள்

பரம்பொருள் என்கையில்,,
இறையும் ஒரு பொருளே!
கரம்கொண்டு தொழுகையில்,
காட்சியெல்லாம் பொருளே!
மரத்தின் வேரென்றும்
மண்ணுக்குள் பொருளே,
விரல்சுண்டிக் காட்டுதல்,
வேண்டப்படும் பொருளே.
இருளறியா பொருளனைத்தும்
வெளிச்சத்தின் பொருளே.
வரம்வேண்டிப் பெறுபவை
வாழ்க்கையின் பொருளே.
உருமாறிப் போனாலும்,
ஒவ்வொன்றும் பொருளே.
பொருள்படக் கூறா,
பொருளிங்கே உண்டோ?
அருள்தரும் பரம்பொருளே,
ஆயுளின் பொருளுணர்த்தும்,
அகமறிந்த மெய்ப்பொருளாம்!.
                               ப.சந்திரசேகரன் .  



Battle to Live.

You cannot kill me by a poison quote
As my cheering stuff is my antidote.
You cannot hang me by a noose;
My buoyancy will break it loose.
You cannot crave to drown me ever;
My teeming tears will over power.
Nay, neither can you burn me to ashes
I am not meant for flammable flashes.

No fall from any spot ever so high
Shall claim my life for the worst try.
Suicide is a stooge of weak minds,
Against which I have my stoic blinds.
Life's beauty is not for despair to stifle;
Nor for death that strikes, just for a trifle.
                                                P.Chandrasekaran.

Friday, November 17, 2017

மாயா


மாயா!
முடிவில்லாக் கதைக்கு முடிச்சுகள் பலவாம்!
முடிச்சுகள் அவிழ்ந்திட மூலைக்கோர் முடிச்சாம்!
அவிழ்ந்ததோர் முடிச்சுகள் ஆளுக்கோர் திசைகாட்ட,
ஆள்காட்டி விரலுக்கு ஆனைபோல் வீக்கமாம்!
முண்டி யடித்து முறையிலாக் குற்றங்கள்,
கண்ட திசையெலாம் களவென புரிந்தோர்,
நண்டுப்பிடியிலும் நாளுக்கோர் நழுவலாம்;
இண்டு இடுக்கெல்லாம் இருட்டென இணைத்து,
குண்டுப்  பெருச்சாளியாய் பெருக்கிய கொள்ளை,
தொண்டுப் பலனோ தோண்டிய குழியோ?
கெட்டும் கெடுத்தும் கட்டிய கோட்டை,
வெட்டிய குழியினுள் வீழ்ந்திடு மாயின்,
எட்டிய உயரம் கர்ப்பக்ரஹமோ காராக்ரஹமோ?
                                                                 ப.சந்திரசேகரன் .  

சொல் தோழா!

சொல் தோழா!
காலில் செருப்புகூட இல்லாமல்,
காலமெல்லாம் சொத்து சேர்த்தாயே !
நீ சேர்த்த சொத்து உன்வாரிசுகள்,
கால் நோகாமல் வாகனத்தில் செல்வதற்கோ?
உன் வாழ்க்கை உன்கையில் என்று சொல்கையில்,
உன்வாழ்கை உனக்கும் தானே?
உன் உடலை நோகடித்து,
உன் சந்ததிக்கு சொத்து சேர்த்தல்,
நீ உன் உடலுக்குச் செய்யும் துரோகம்தானே?
வாழ்நாள் முழுவதும் உன் உயிரை சுமக்கும் உடலுக்கு,
நீ செலுத்தும் மரியாதைதான் என்ன?
தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் என்பது,
தரம் தாழ்ந்த நிலையே.
ஆனால் தன்னைப் புறக்கணித்து,
ன் வம்சம் வாழ நினைப்பது,
உன் பிறவிக்கே நீ செய்யும் துரோகமன்றோ!
நீ என்ன தொழில் செய்கிறாய் என்பது முக்கியமில்லை;
உன் தொழிலின் உண்மை உன்னை உயர்த்தும்.
இருப்பினும் உன்னையே உதாசீனம் செய்து,
சந்ததிக்கு நீ சேர்க்கும் செல்வம்,
நீ வாழும்போதே  உன்னை சுமக்கும் சவப்பெட்டியே! 
                                                              ப.சந்திரசேகரன் .  

Wednesday, November 15, 2017

Between the Head and the Heart.




Your love,
Created a heart in me,
To know what love means.
As my heart started beating
It struck me with a hunch.
Love has its fugitive's faster beats.
It beats like the heart of a new born.
New born love, knows no direction.
It beats with a reckless roller coaster rhythm.
Is headway better than the heart way?
Your love said "one's heart shall beat,
As per the directions of one's head"
Then your fixed a head in me,
To reckon the beats of my heart.
Now my heart beats the way it should,
With a tacit direction from your love.
I also now know, love is both a matter of
The head and heart, in their unison.
My Love,
Where do you owe your head and heart?
                                                                   P.Chandrasekaran.

Sunday, November 5, 2017

Fenced Fears.















I put fences against my illusions.
My illusions encircled me as fences.
The waves of fear surpassed the shores.
Danger is not in what is happening,
But in the fears of what is to happen.
There is no risk allowance
Against wanton, risky thinking.
If bubbles and balloons are feared as bombs,
The brain becomes a nuclear station.
Serpents are not static ropes;
Nor do ropes wriggling in the wind,
Transform into hooded snakes.
Self-hoodwinking breaks the shelters,
In search of new fences for defense.
Hallucination is the haberdasher 
Of a haunted mind, weaving new threads
Of fences to field, fresh, frustrating, fears.
                                       P.Chandrasekaran.

Wednesday, November 1, 2017

ஒரு பக்தனின் அன்பிற்கு அடிமை.

     இறைவன் சர்வவல்லமை வாய்ந்தவன்; எல்லாம் அறிந்தவன்; எங்கும் நிறைந்தவன். இருப்பினினும், ஒரு பக்தனின் அன்பினில் அவனை அடிமைப்படுத்தமுடியும் என்கிறார், தனது சொற்பொழிவில் சரளா ராஜகோபாலன்.
    புனிதன் வள்ளலாரும், இறைவனின் இப்பண்பினை வர்ணிக்கிறார் இறைவன் மலையைப்போன்றவன் என்றும், ஆனால் அவன் தன பக்தனின் கரங்களில் குடியிருக்க வருவான் என்றும் கூறுகிறார், வள்ளலார்.
    மன்னாதி மன்னனாகிய இறைவன், ஏழை பக்தனின் குடிலில் வந்தேரத் தயங்கமாட்டான். அமரத்துவம் அளிக்கின்ற அமுதத்தைப் போல், அடைவதற்கு கடினமானவன் இறைவன். ஆனாலும், பக்தனின் கரங்களில் தங்கிட., பொங்கி மகிழ்வான். ஆழ்ந்து விரிந்த கடலைபோன்றவனாகினும், பக்தனை வந்தடைவான். ஒளியேற்றும் ஞானத்தின் வடிவானவன்; ஆனாலும் பக்தி என்னும் அணுவினில்   டங்குவான்.ஒரு   உண்மையான  பக்தன்     இறைவனை  ன்  அன்பினால் கட்டிப்போடுவான்.
     வில்லிபுத்தூராரின் மகாபாரத தமிழ் வடிவத்தில், பாண்டவர்களின் தூதராகப் புறப்படுவதற்கு முன்னால், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அணுகி அவர்கள் கருத்துக்களை அறிய முற்படுகிறார் கிருஷ்ணபரமாத்மா.
     தர்மன் அமைதியை விரும்புவதாகக் கூறுகிறார். பீமன், அர்ஜுனன், நகுலன் மூவரும் போரை விரும்புகின்றனர். பின்னர் கிருஷ்ணன் சகாதேவனை தனியே அழைத்து, அவன் என்ன விரும்புகிறான் என்று வினவுகிறார்.அதற்கு, இறைவனின் எண்ணமே இறுதியானது என்பதை உணர்ந்த, ஞானியாகிய சகாதேவன், "நீ என்ன விரும்புகிறாயோ அதையே நானும் விரும்புகிறேன்" என்கிறான்.
    போரினைத் தடுக்க அதற்கு கருத்துக்கூறியே ஆகவேண்டும் என கிருஷ்ணன் வலியுறுத்த, "கர்ணனை மன்னனாக்கு; பீமனைக் கட்டிப்போடு; உன்னையும் கட்டிப்போட்டாகவேண்டும்" என்று பதிலளிக்கிறான் சகாதேவன். அதற்குக் கிருஷ்ணன், "ஒருவேளை மற்ற இரண்டும் நிறைவேற்றப்படலாம்; ஆனால் என்னை எப்படி கட்டிப்போடுவாய்" என்கிறார்.
   அதற்கு சகாதேவன், கிருஷ்ணன் உண்மையான உருவத்தை காண்பித்தால் தான்  கட்டிப்போடுவதாகக் கூறுகிறான். கிருஷ்ணன் தன் விஸ்வரூபத்தைக்  காண்பித்து சாகாதேவனுக்கு தன்னை கட்டியிடும் வலிமையையும் அளிக்கிறார். பின்னர் தன்னை விடுவிக்குமாறு அதே சகாதேவனை யாசிக்கிறார் கிருஷ்ணன். பாண்டவரின் வெற்றிக்கு கிருஷ்ணன் உறுதிகூற,  கிருஷ்ணனை விடுவிக்கின்றான், ஞானியாகிய சகாதேவன்.
{இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 30,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான, "  Slave to a Devotee's Love" எனும் கட்டுரையின் தமிழாக்கம்'}
                                                                                         ப.சந்திரசேகரன் .  

Tuesday, October 31, 2017

Two Ghosts on a Halloween Day



Ghost I

Remember!,
Who made you,made me too.
It is not that I should woo a figure like you,
Just because the same hands made us two.
I curse the hands that made me look small
When you stay tall in the  Halloween  hall.
My baby face is cruder than the painted balloons.
To hell with the guy who cast me as one among the buffoons,
When I am fit enough to find a place in a gang of goons.

Ghost II

Listen!
Each one gets what they deserve
Not only when they live but also after.
I adore the pair of hands born to serve;
The hands that made me reflect my chapter.
Jealousy is human and not the character of a ghost.
Don't think I say these words strutting only to boast;
Let us celebrate Halloween, hailing the skill of our maker,
But for which, we would have made our tombs ever darker.
                                                P.Chandrasekaran.



Monday, October 30, 2017

அன்னையின் பரிசு .



   தமிழகத்தின் ஸ்ரீவைகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த சண்முக கவிராயர் எனும் புனிதரின்  மனையாளும்,  மதம் போற்றும் மனமுடையவராக இருந்தார். அவர்கள் தங்கள் மகனுக்கு குமர குருபரர் என்று பெயர் சூட்டினர். ஆனால் குழந்தை பேசமுடியாத நிலையினைக்கண்டு, பெற்றோர் பெரிதும் கவலையுற்றனர். அவர்கள் மகனுக்காக,  சண்முகநாதனை வழிபட திருச்செந்தூர் சென்றனர்.
    ஒருநாள்  குமரகுருபரர் பேசத் தொடங்கினார்.  அவர் கவிஞர் ஆனார்.  சண்முகநாதனுக்கு தனது நன்றியைத் தெரிவிக்க, நாதனைப்புகழ்ந்து கவிதை புனைந்து, அக்கவிதைத் தொகுப்பினை 'கந்தர் கலிவெண்பா ' என அழைத்தார். அத்தொகுப்பின் இறுதிப்பாடலில்,"இறைவா உன் தாமரைப்பாதத்தைக் காண்பித்து எனக்கு ஆசி அருள்வாயாக" என்று வேண்டினார்.
   குமரகுருபரர்  தனது ஆசிரியர் மாசிலாமணி தேசிகரிடம், மிகுந்த மரியாதை கொண்டு, அவருக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான், 'பண்டார
மும்மணிக்கோவை' எனும் கவிதை புனைந்தார்.
    குமரகுருபரர் மதுரையில் இருந்தபோது  'மீனாட்சி பிள்ளைத்  தமிழ்' எனும் கவிதை புனைந்தார். அவர் இக்கவிதைத் தொகுப்பை புனையும்போது, தேவி ஒரு சிறுமியாக இருந்தார் என்கிறார்,திரு. மலையமான் தனது சொற்பொழிவில். தேவி  மீனாட்சியே இக்கவிதை தொகுப்பினை கேட்டு,  ரசித்ததாகச் சொல்லப்படுகிறது. குமார குருபரரின் அற்பணிப்பில்  திளைத்த தேவி, அவருக்கு ஒரு முத்து மாலையினை பரிசாக அளித்தார்.
   இப்புனிதர் வாரனாசி சென்று அங்கு நீண்டகாலம் தங்கியிருந்தார். வாரனாசியிலும் தனது ஆன்மீகச் சேவையினைத் தொடர்ந்தார். அங்கே இருக்கையில், 'காசி கலம்பகம்' எனும் நூலையும், விநாயகர் பற்றிய படைப்பையும் உருவாக்கினார். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டது, துரதிஷ்டவசமாக நமக்கு கிட்டாத இழப்பாகிவிட்டது.
   குமரகுருபரர் வாரனாசியில், இந்தியிலும் தனது சொற்பொழிவுகளை வழங்கினார். கம்பராமாயணத்தைப் பற்றிய அவரது சொற்பொழிவுகள் துளசிதாசரை வெகுவாகக் கவர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தியைத் தாமொழியாகக் கொண்டவர் முன்பாக,இம்மேதை ஆற்றிய சொற்பொழிவு களே,அவருக்குக் கிடைத்த புகழாரமாகும். 
'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 26,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான " A Gift from the Goddess"  எனும் கட்டுரையின்  தமிழாக்கம்'}
                                                                                         ப.சந்திரசேகரன் .  

Wednesday, October 25, 2017

மூன்று தடைகள்.

    சைவ சித்தாந்தத்தில் மூன்று மைய்யக் கோட்பாடுகள் உள்ளன. அவை 'பசு ' 'பதி' 'பாச' என்பதாகும். 'பதி' என்பது இறைவனையும் 'பசு' மனித ஜீவாத்மாவையும் 'பாச' என்பது அகந்தை{Ego}, மாயை, மற்றும் கர்மவினையினை குறிப்பதாகும்.
  அகந்தை, மாயை, கர்மவினை மூன்றும் நம் ஆன்ம விமோசனத்திற்கும் விடுதலைக்கும், தடைகளாகும். இவற்றிலிருந்து விடுபடமுடியாதவர்கள், சில விரும்பத்தகாத குணங்களை வெளிப்படுத்துகின்றனர் என்று தனது சொற்பொழிவில் சரளா ராஜகோபாலன் விளக்குகிறார். அவர்கள் பேராசைகொண்டு, எதையும் 'போதும்' என்று சொல்லமுடியாமலிருக்கின்றனர்.
     நமது ஆசைப்பட்டியல் அதிகமாகி, அனைத்தையும் நிறைவேற்ற முயலும்போது, நாம் ஏமாறப்போவது தவிர்க்கமுடியாததாகும். ஒன்றை அடைவதில் நாம் முனைப்புடன் இருக்கையில், சிறிய ஏமாற்றம்கூட நமக்கு  தாங்க முடியாததாகிறது. இதன் விளைவாக நாம் அவலமைடைகிறோம்.
     வாழ்நாள் முழுவதையும் செல்வம் தேடுதலில் செலவிட்டு, மேற்கொண்டு செல்வம் ஈட்ட இயலா நிலையில் அலைக்கழிக்கப்பட்ட நாம், இறைவனிப்பற்றி சிந்திக்கக்கூட இயலாமல் ஆகிறோம். ஆனால் இறைவனை ஆழ்ந்து நேசிப்பவன், அன்பே இறைவனென உணருகிறான். அறிவீலிகள் அன்பும் இறைவனும் மாறுபட்டவை என நினைக்கின்றனர்.முற்றுணர்ந்த  ஆன்மாவோ "அன்பே இறைவன் இறைவனே அன்பு" எனபதை உறுதிபட அறிகிறது.
     இதனையே திருமூலர் அன்பும் இறைவனும் பிரிக்கமுடியாதவை என்றும், இரண்டும் ஒன்றுபட்ட நிலையே என்றும், எடுத்துக்கூறுகிறார். இறைவன் அன்பின் மறுஉருவமாகிறார்; நாம் அவரின் அருளைப்பெற தகுதியடைய வேண்டும். அன்பால் நம்மை அர்ப்பணிக்கும் வாழ்க்கையில், இறைவனே நம்மிடம் வருகிறார்.
   மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது கொண்டுள்ள மட்டற்ற பக்தியினால், அவரை அடையும் நிலை அறியா பரவசத்தில் இருந்தார். ஆனால்  சிவபெரு மானோ, பக்தனின் பரவசத்தைப் பக்குவப்படுத்தி, அமைதிப்படுத்தி, தன் பாதம் காணும் பாக்கியம் தந்தார். மாணிக்கவாசகர் இறைவனின் கருணையை தனது திருவாசகத்தின் மூலம் கொண்டாடினார். சிவனைத் தவிர வேறு எதற்கும் தனது சிந்தனையையும் நேரத்தையும் ஒதுக்க மாணிக்கவாசகர் தயாராக இல்லை. இறைவனும், இப்புனிதரின் அன்பிற்கு இணையான கைம்மாறு புரிந்தார்.

{'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 24,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான " The Three Hurdles"  எனும் கட்டுரையின்  தமிழாக்கம்'}
                                                                                         ப.சந்திரசேகரன் .  

Monday, October 23, 2017

சொல் தோழா!

சொல் தோழா!
உரிமை உனக்கும் எனக்கும் பொதுவன்றோ ! 
உன்கை ஓங்கிட என் கரங்கள் கட்டுமோ ?
என்குரல் எழுப்பிட, உன்குரல் ஆணையோ?
அரியணை ஏறிட ஆணவம் மகுடமோ?
பறிபோன உரிமைகள் பாவத்தின் பாரமோ?
சரியென்றும் தவறென்றும் இருவழிகள் இருக்க,
பதவியில் பயணிக்க இருவழியும் சரிவழியோ?
கட்டவிழ்த்த காளைக்கு கொம்புகள் ஆளுமெனில்
கட்டிய கரங்களை, காத்திடக் கால்முளைக்கும்.
எதிர்த்திடும் உரிமைகள் இயல்பென நீ உணர,
விதித்திடும் ஆணைகள் வெறுப்பினைக் வேரறுக்கும்.
எதிர்ப்பினை நீ நெறிக்க, புதுப்புது பிழம்பாகும்
என்னுரிமை எனதாகின் உன் உயரம் உனதாகும்.
என்னுரிமை நீபறிக்க உன் இரங்கட்பா எனதாகும். 
                                                                 ப.சந்திரசேகரன் .  

Tuesday, October 17, 2017

நாளும் தீபவாளி.

நட்புகள் கூடிட , நன்மைகள் கோடி,
உட்புறம் ஒளிபெற, உலகுக்கது ஒளியாம்.
அற்புதம் அனைத்தும் அன்பினில் அரும்பிட,
விற்பனைக் கடங்கா வியப்பினைப் போன்று,
சிற்பியின் உளியினில், சீர்பெறும் இறைமையை,
பொற்பாதம் தொட்டு புதுப் பொலிவடைவோம்!
நிற்பதும் நடப்பதும் நீதியின் நிழலெனின்,
கற்பதும் கேட்பதும் காலத்தில் நிலைத்து,
முற்பகல் வினையின் முட்கள் களைந்து,
கற்புடன் தீபத்தை காணிக்கை ஆக்குமாம் !
தற்புகழ் தோற்பது தவப்பயன் ஆகிட, 
நற்பணி யாற்றலே தீபத்தின் ஒளியாம்.  
                                                        ப.சந்திரசேகரன் .  

Wednesday, October 11, 2017

விதுரரின் பணிவு.



   "இங்கே எதையுமே நமதென்று கோரும் உரிமை நமக்கில்லை" என்று உணர்ந்தவர் ஒருசிலர்கூட இல்லை. மற்றவரிடமும் நமக்கு உரிமை ஏதும் இல்லை. மோட்சப் பயணத்திற்கான  முதல் படியே, நமது வாழ்வில், பொருட்களிடமோ அல்லது நபர்களிடமோ, உடமை உணர்வுக்கான இடமில்லை என்பதை புரிந்துகொள்வதுதான்.
 "நான், எனது என்பதை விட்டொழியுங்கள்" என்கிறார் நம்மாழ்வார். நான் என்பதை வேரறுக்கவேண்டும் என்கிறார் அவர். பகவத் கீதை முழுவதிலும் இந்த செய்தியே காணப்படுகிறது என்றார், திருமதி சரளா ராஜகோபாலன் தனது சொற்பொழிவில்.
   வாழ்க்கையில் ஒருவரது மனநிலை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான ஒரு அருமையான உதாரணத்தை நாம் மகாபாரதத்தில் பார்க்கிறோம். கிருஷ்ணபரமாத்மா துரியோதனனைக் காணச் செல்கிறார். பாண்டவரின் தூதராக அவரது வருகையின் நோக்கம், துரியோதனனை நியாயமாக இருக்கும்படியும் பாண்டவருக்கு அரசவையில் அவர்களுக்குரிய பங்கினை கோரவும் தான்.
     கிருஷ்ணரின் தேர் ஹஸ்தினாபுரிக்குள் நுழைகிறது. நகரத்தில் உள்ள ஒவ்வொரு மாடமாளிகைக்கும் வெளியே நின்று, "இது யாருடைய வீடு" என்று வினவுகிறார் கிருஷ்ணர். ஒவ்வொரு இல்லத்தின்.  சொந்தக்காரரும் ஒருவர்பின் ஒருவராக "இது எனது இல்லம்" என்கின்றனர் மேலும் ஒவ்வொரு வரும் "கிருஷ்ணா வருக வருக என்னுடன் தங்கிச் செல்க" என்கின்றனர் கிருஷ்ணபரமாத்மா எவரின் அழைப்பையும் ஏற்காத நிலையில்,தேர் நகர்கிறது.     இறுதியில் தேர் விதுரரின் இல்லத்தை அடைகிறது."இது யார் வீடு" என்கிறார் கிருஷ்ணர் அதற்கு விதுரரோ "எல்லாம் உன்னிடமிருந்துதானே வருகிறது. இந்த வீடும் உன்னடையதுதானே கிருஷ்ணா. உன்னுடைய வீட்டிற்கு நீவர அனுமதி கோரவேண்டுமா? அல்லது அழைப்பிற்காக காத்திருக்க வேண்டுமா? "என்கிறார்.
     விதுரரின் பதிலில் நிறைவுகண்ட கிருஷ்ணர், அவருடன் தங்க முடிவு செய்கிறார். துரியோதனன் உட்பட பலரது அழைப்பையும் ஒதுக்கித்தள்ளினார் கிருஷ்ணபரமாத்மா. இறைவனுக்கு ஒருவன் மன்னனோ அல்லது பரதேசியோ என்பதுபற்றி அக்கறையில்லை. பணிவுள்ளவரே இறைவனின் ஆசியைப் பெறுகின்றனர். விதுரர் தனது பணிவால் இறைவனைக் கவர்ந்து ஆசியைப் பெற்றார்.
{  'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 11,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான "Vidhura's Humility"  எனும் கட்டுரையின்  தமிழாக்கம் ' }
                                                                                                     ப.சந்திரசேகரன் .  

Monday, October 9, 2017

மாயா.

மனிதனுள்,
மிருகத்தின் எடை கூடிக்கொண்டே செல்கிறது.
மனதை உடல் தின்றுவிட, மாமிசமே மிஞ்சுகிறது.
அசையும் மாமிசத்திற்கு ஆயூதங்களே அரிச்சுவடி.
ஆன்மீகத்தில் அரசியல் சாயமில்லாக் காலங்களில்,
ஆன்மா உடலுக்கு அங்குசமானது.
அரசியல் மதத்தினில் மாமிசம் கலந்திட,
அதுவே ஆலாகால விஷமானது.
விடியலுக்குத் தேவை,
வியர்வையைப் போற்றிடும் உடல்.
உழைப்பினில் உலகை உள்ளடக்கும் உடல்.
உடலே ஆயுதமானால் உலகம் பாழாகி,
கடலில் கரைத்த  பெருங்காயமாகுமோ,
விடையறியா மாயமாய் மனம்?
                                                  ப.சந்திரசேகரன் .  

Friday, October 6, 2017

தேவியின் மகிமை

 

     காலம் காலமாக தேவி வழிபாடு நடைமுறையில் உள்ளது. மத நூல்களும், புராணங்களும், இறைவழிபாட்டுப் பாடல்களும், இந்த தேவி வழிபாடு, அழகும் சத்தியமும் ஒருங்கிணைந்து தேவியின் வடிவாக உச்சமடையும் அகநிலை அனுபவத்திலிருந்து சுரக்கின்றது என்று, வெளிப்படுத்துகின்றன.
    'தேவி பகவத்கீதையில்', தேவி தனது தந்தையார் ஹிமாவனிடம் இவ்வாறு உரைக்கிறார். "மலைகளின் அரசனே! இந்த அகிலமும் அசையும், அசையா அனைத்தும், எனது மாயசக்தியால் உருவாக்கப்படுகிறது.இந்த மாயை என்னுள் கருத்தரிக்கிறதேயல்லாது, உண்மையிலேயே என்னிடமிருந்து மாறுபடுவதோ பிரிக்கப்படுவதோ இல்லை.எனவே நானே இங்கு சர்வ சித்தி யாகிறேன்.நடைமுறையில்  மாயா என்று தோன்றினாலும்,என்னையன்றி வேறு சித்தியில்லை".மேலும் ஹிமாவனிடம் தேவி கூறுவதாவது "எப்பொழு தெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் தலையெடுக்கிறதோ, நான் வேறு வடிவங்களில், மாறு வேடங்களில், உருவெடுக்கிறேன்"
   "இது பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா அவ்வப்போது, தர்மம் தாழ்கையில் அதனை நிலைநிறுத்த தான் தோன்றுவதாக, பிரசித்திபெற்ற வாக்காகக் குறிப்பிடுவதற்கு, நேரிடையாகத் தொடர்புடை யதாகும்" என்று ஒரு சொற்பொழிவில், திரு B. சுந்தர்குமார் குறிப்பிட்டுள்ளார். எனவே தேவியின் அவதாரங்களும் மாறு வேடங்களும், குறிப்பிட்ட தேவைகளுக்கேயாகும்.
     இதனைப் பின்பற்றி திரேதா யுகத்தில் தேவி, ராமனின் வடிவமெடுப்ப தாகவும் சிவபெருமான் சீதையின் உருவமெடுப்பதாகவும், மற்றும் நந்தி அனுமன் வடிவமேற்பதாகவும், ஒரு சிந்தனைப்பள்ளி ஒப்புக்கொள்கிறது. இக்கருத்தினை மேலும் மேம்படுத்தி, இராவணன் சிவபெருமான் மீதுள்ள பக்தியினாலேயே, அவர்  வடிவமேற்றுள்ள சீதையினை இலங்கைக்கு கடத்துவதாகவும், வால்மீகி இராமாயணத்தை மேற்கோள் காட்டி விளக்குரைஞர்கள்  கருத்து தெரிவிக்கின்றனர் .அயோத்யா காண்டத்தில் இராமன் தனது கதாபாத்திரத்தினை செவ்வனே நடித்திடும் வகையில் சீதையை வனவாசத்திற்கு கூட்டிச் செல்ல மறுக்கிறான்.
   பின்னர் சீதையும் தனது மூலமுதலான உணர்வினைப் பெற்று, தான் நாடகத்தை அரங்கேற்றுகிறோம் என்பதையும் மறந்து, இராமன் ஆணுடையில் இருக்கும் ஒரு பெண் மட்டுமே என்றும், இந்த உண்மையினை அவளது தந்தை பார்க்கத் தவறிவிட்டார் என்றும் கூறுகிறாள்.
 {  'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 04,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான "Supremacy of Devi"  எனும் கட்டுரையின் சுமாரான தமிழாக்கம் ' }

                                                                                                           ப.சந்திரசேகரன் .  

Break ! Break ! Break !


We break our heads
For several breakthroughs in life.
Be it romance or rivalry or a range of routes.
The break up figures are not easy to crack.

When efforts break down,
Some get heart- broken;some stay rocky.
Some apply a timely tacit brake
To thwart a break down.

Those who bluntly break away,
Leaving trust in the lurch,
Break the norms of collective goals,
Betting for a space for the back stab.

When illusions break out as deeds
Not binding on precepts of faith,
Life's breakthroughs break into fragments,
Staying as the embers of a broken burnt wood.
                                             P.Chandrasekaran.

Sunday, October 1, 2017

The Mahatma.



Mahatma is mainly, a mind conquering concept,
Encrypted evenly, in myth, mystery and miracle.
The breath of a Mahatma is a pulmonary protocol 
That inhales the oxygen of love to lift all from a fall.

For an ever occupied, underground octopus mind,
A misty might,seems to misgovern the studded sky.
But a Mahatma's meek manifestation of mind mold,
Shows actions triggered by a shooting vision of hold.

Self- automated saintly visions, surge into actions,
To surpass the self and solve the maze of the mist.
Visions are not arched from outstanding springs.
As their genesis within,demystifies the inner rings.

A Mahatma meddles not with a misty goal, but meets it,
Without masterminding murky, manipulative, measures.
Mahatma has no itch for leadership, or its load of tributes.
Though it has a line, faithfully bound to its radiant routes.
                                                           P.Chandrasekaran.

The Nuke Norms.

                    I
Strike when you are weak,
Your courage will stand up and speak.
Strike when you are strong,
To make it right, though you are wrong.
                   II
Shudder a strike, to announce,
If you know your strikes are bound to bounce;
Shiver not a strike to pronounce,
Being sure,your enemies,you will trounce.
                    III
Be discreet not to strike
Just to enable your rivals, to think alike;
Be upright to annul an attack,
With a placard of peace,on the right track.
                    IV
Be human never to strike at all.
Because it drives one side, to a fatal fall.
One's fall, does not make the other tall;
Let the truth of truce, be the nuke's pall.
                                             P.Chandrasekaran.

Thursday, September 28, 2017

மாயா.



படியேறு!
முதல் படியிலேயே மூச்சு முட்டுகிறாய்.
ஏறும் படிகளை எண்ணிக்கொண்டிருந்தால்,
ஏற்றமே சுமைதான்;
ஆற்றத் தெரிந்த மனமே
ஆறுமாம் அனல் கடந்து .
பொறியில் இருக்கும் எலிக்கோ
பிடிபட்டக் கவலை!
மறியல் புரியும் மனதிற்கோ,
மாற்றமுடியாக் கவலை.
வெறியில் ஆடிய ஆட்டத்தை
வெற்றிடம் நிரப்புமோ?
அறியாப் பிழைகளை,
படிகள் ஏறிட,
படிப்படியாகக் குறைத்துக் கொள்.
இறுதிப்படியில் இளைப்பாறுவாய்!
பொறியில் எலிக்குப்புலருமோ பொழுது?
பொறுமை இழந்திடின்,பலிக்குமோ கனவு?
வெறுமை அறிதலே வேள்வியின் வீச்சு.
முறியடி முனகலை;முற்றிடும் மனமே.
                                                ப.சந்திரசேகரன்       

Tuesday, September 19, 2017

நவராத்திரி பொம்மைகள்



பத்துநாள் பங்காளிகள்! படிகள்பல கண்டவர்கள்!;
மொத்தமாய் பரணியேறி, மூட்டைக்குள் குடியிருந்து,
கெத்தாய் மீண்டுமிங்கே களிப்புற  படியமர்ந்து
சுத்தமாய்  மனதினில் சொர்க்கம் சேர்ப்பவர்கள்.
உத்தம அவரோடு,ஊரெல்லாம் கொண்டாட்டம்.
பித்தனின் பார்வதியும், பரந்தாமன் பரிமளமும்,
நித்தமும் படைத்திடும், நான்முகன் வாணியும்,
யுத்தங்கள் புரிந்திங்கே தீமைகள் துரத்திட,
வித்தைகள் பலவாகி,வேட்கைகள் வேரூன்றி,
சத்தியமும் சாத்திரமும் சான்றுகள் உரைத்திட ,
இத்தரையின் இருளகற்றும் இதிகாசம் தன்னை,
சத்தமாய் முழங்கிடுவோம்,சங்கீத சாசனமாய்!
சொத்தினும் மேலெனப் போற்றிடும் பொம்மைகள்,
சித்தரின் சீலமும் செயலாக்க நெறிகளும், 
பத்துநாள் பரிசாக,நித்தமும் அளிக்குமாம்.
அத்தனை நன்மையும் அருளோடு அரும்பிடவே,
சத்தான உணவென்னும் சமூகப் பிணைப்பில்,
பத்தானை பலம்பெற்று,பரிவோடு இணைவோம்!
                                                                                    ப.சந்திரசேகரன் .      

Monday, September 18, 2017

All Pains No Gains.


Is strain,a gain or just pain?
If the harvest is a gain
It is a celebration of strain.
If the noose kills the pain of strain,
Where lies the hairline loss of gain?
When the beggars'outstretched palm
Either gains or loses the alms,
What pain is there for the automated arms?
There are those who represent others' pain
To make greedy gains with least strain.
People elect them for a perk, to ease a day's jerk.
The Gods have no qualms to see these days,
Makers of mindless gains, without a strain,
Mindfully marking a margin of their gains,
To fill God's coffers, His unearned share, as gain.
The poor are forced to open bank accounts,
With hopes of gains in their passbooks,
Only to suffer the strain of penalty
For failure to keep minimum balance.
The pain of penalty overtakes the gain of a strain.
The seniors without pension drain their balance
As the gain of their accounts,shrinks to strain.
"No pains no gains"is nothing but a stale adage.
"All pains but no gains"is the bane of bondage.
                                                      P.Chandrasekaran.

Friday, September 15, 2017

ஒளியினில் கரைதல்,



எரிந்தே கருகிய திரியொன்று  திரும்பி
எண்ணையைக் கண்டு  எரிந்து விழுந்தது.
"உன்னால் என்னாயுள் தீயினுள் தீர்ந்தது".
திரியின் ஒளிக்கென தீர்ந்திட்ட எண்ணையோ,
திரியை நோக்கி எகிரிப் பாய்ந்தது.
"உன்னொளி உயர்த்திட ஒழுகியே ஒழிந்தேன்" 
உருகிடும் மெழுகும் ஒளிதரும் திரியும்,
உடன்படா இயக்கம் உள்குத் தாகும் .
பருகிடும் உணவே பாழ்நஞ் சாகுமோ
இருமனம் இணைவதே திருமண மென்பர்;
ஒருவழி போகா இல்லற மென்றும்,
உருப்படி யாகுமோ உலையாய், உணவாய்!
தியாகச் சுடரென தீபமாய் எரிதலே,
யாகம் போற்றிடும் இறையொளி யாகும்.
சேர்ந்து உயர்த்தலே சேவையென்  றாகுமாம்;
சேராது அழிதல் சேதார மாகுமாம்.
எண்ணையும் திரியென ஒன்றாய் இளைத்தலே,
மண்ணில் ஒளியென, மானுடம் காக்குமாம். 
                                                          ப.சந்திரசேகரன் .      

Sunday, September 10, 2017

The Live Link.

In God's Chamber
The incoming calls seem to be blocked.
All my calls were not received.
God's mobile links are either switched off
Or the mobiles are kept in silent mode.
But once there was a surprise call from His end.
It only said "social network nuts don't call me up
You think of me only when your net connections are lost;
I am not a sidekick for your past time"
Then I went to see Him face to face.
The doors at His shrine remained closed.
I thought perhaps it was His special private hours.
Suddenly I heard a voice which said
"You come to me only when the theaters await
Their new releases that you are yet to see"
When man has more time for wikipedia
Than for the worldwide views of God,
God has His time too for His well chosen wards,
For whom His voice and vault of faith count more
Than for those,stapled to the social network.
The live link at God's website is more intricate
Than the loud lobbying links of the social media.
                                                P. Chandrasekaran.
  

Tuesday, September 5, 2017

நீ சாதாரணமானவன்.




நில்! 
நீ சாதாரணமானவன்;
நெருங்கினால்,
நீட் தேர்வில் நிலைகுலைந்து போவாய்.
நெரிசல் போட்டியில் நெஞ்சடைத்துப் போவாய்.
சமுதாயக் கிடங்கின் சந்தை பரிவர்த்தனைகளில்,
நீ சதா, ரணமானவன்!
நீ சிந்திய வேர்வையில் சிதைந்திடுவாய்.
தகுதிப் பதிவேட்டில் தளர்ந்திடுவாய்.
நம்பிக்கை கயிறாக, நாண்டிடுவாய்.
நீ சொந்தமாய் சுவாசிக்கவே சேவைவரி கட்டுபவன்.
விலகிவிடு ;வீதியே உனக்குச் சொந்தம்.
ஏனெனில், நீ சாதாரணமானவன். 
                                                         ப.சந்திரசேகரன் .      

Monday, September 4, 2017

நாடாளும் வேட்கையில் நடிகர்கள்.

அரசியல் என்பது , வெண்திரையைக் கடந்து வீதிகளில் விளையாடப் படவேண்டிய ஒரு விவேகமான விளையாட்டு. சுதந்திர போராட்டமும், திராவிட இயக்கமும், வீதிகளில் அரங்கேறி, பின்னர் ஆட்சிக் களத்தை அலங்கரித்ததை, இந்தியரும் தமிழரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் சேவைக்காக மட்டுமே,அரசியல் வரலாறு படைத்த மகான்கள் வாழ்ந்த மண்ணில், இன்றைய நிலையென்னவோ வேறுதான். இருப்பினும், வீதிகளே அரசியலின் புறப்பாட்டு தலங்கள் என்பதில், மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.
   ஆனால் வெண்திரையை அரசியலின் கருவறையாக மாற்றியது யார்? திராவிட இயக்கம் தொடங்கியபோதே திரையுலகத் திருவிழாவும் தொடங்கியது என்பது,தமிழகத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையாகும். அண்ணாவும் கலைஞரும் இதற்கு பிள்ளையார் சுழிபோட்டு, பெரும்பாதை அமைத்து கொடுத்தனர். தெருவில் தொடங்கிய இயக்கக் குரல், திரைவழியாக கிடுகிடுவென்று திரையிசைப் பாடல்களாகவும், வசனங்களாகவும், நீரோடை நுழைவதுபோல் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்து, திராவிட இயக்கம் தமிழகத்தை அரசாளச் செய்தது. சுதந்திரத்திற்கு போராடிப் பெயர்பெற்று, அரசாண்ட கட்சி, இன்றுவரை, இழந்த அரசை தமிழகத்தில் மீட்டெடுக்க முடியவில்லை.
     அண்ணாவின் பேச்சாற்றலும் மனித நேயமமும், அவரை மக்கள்பால் வெகுவாக ஈர்த்தது .அதேபோன்று கலைஞரின் சொல்லாண்மை, படைப்பாற்றல், மற்றும் நிர்வாகத் திறன், அவருக்கு மக்களின் செல்வாக்கை ஈட்டித் தந்தது .இதேகால கட்டத்தில் தான், வீதியோடு நில்லாது, வெண்திரை யிலும், திராவிடக் கொள்கைகளையும் சமதர்மக் கோட்பாடுகளையும் தனது திரைப்பட வேடங்கள் மூலமாகப் பரப்பிய எம் ஜி ஆரின் செல்வாக்கு, பன்மடங்கு உயர்ந்து, அரசியலுக்கு வெண்திரையிலிருந்து வீதிவரை, பாலம் அமைத்துக் கொடுத்தது. இந்த இணைப்பால் மக்களிடம் எம் ஜி ஆரின் பிணைப்பு ஆழமாகப் பதிய, ஒவ்வொரு அரசியல் கூட்டத்திலும், அவரின் தோற்றம் திராவிட இயக்கத்திற்கு பலம்  கூட்டியதோடு நில்லாமல், எம் ஜி ஆர் என்னும் மூன்றெழுத்தை அன்றய அரசியலின் தாரக மந்திரமாக்கியது.
     திரைவழியாக மக்கள் மனதில் பதிந்த எம் ஜி ஆர் என்னும் நடிகர், எல்லாத் திரைப்படங்களிலும் ஏழை எளியோருக்காகப் போராடும் நல்லவர் எனும் கதாபாத்திரங்களில் மட்டுமே தோன்றியதாலும், அவரது புரட்சிகரமான பாடல்களினாலும், ஏழை எளியோர், அவரைத் தங்களின் உன்னதமான பிரதிநிதியாகக் கண்டனர். திரைப்படங்கள் மூலமாக எம் ஜி ஆருக்குக் கிடைத்த இந்த அசைக்கமுடியாத செல்வாக்கு பின்னர் அவரை எவராலும் வெல்ல முடியாத தலைவராக உருவாக்கி, அவரது ஆயுட்காலம்வரை மக்களது நம்பிக்கையைப் பெறச் செய்தது.
    எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின்னர்,  எண்ணற்ற திரைப்படங்களில் அவருடன் ஜோடியாக நடித்து, அவரது நிழலாக நின்ற செல்வி ஜெயலலிதா, அவரது  இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். திரைக்கதாப் பாத்திரங்களை வாழ்க்கையின் உண்மையான உதாரணங்களாக, உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களின் அன்பும் பாசமும் விலைமதிப்பற்றவை என்பதை எம் ஜி ஆரும் செல்வி ஜெயலலிதாவும், அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதிலும், அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கக்கூடும் .
      எம் ஜிஆரின் இந்த அரசியல் வெற்றிக்கு அவரது திரைப்படங்கள் மட்டு மல்லாது ஆட்சியைப் பிடிக்குமுன்பே அவர் அண்ணாவுக்கு நெருக்கமானவர் என்பதும், திராவிட இயக்கம் ஆட்சியைப் பிடிப்பதற்கு, அவரின் மேடைத்தோற்ற மும், தேர்தல் நேரத்தில் அவர் குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்ததால் விளைந்த அனுதாப அலையும், பெரும்பங்கு வகித்ததென்றால் அது மிகையாகாது. இவை அனைத்திற்கும் மேலாக எம் ஜி ஆர் திரைப்படப் பாடல்களில் பரவலாக வெளிப்பட்ட 'நான்' எனும் சொல்லின் தாக்கம் அவரை மக்களோடு இணைத்து 'நாம்' என்று சொல்லவைத்தது. இந்த நான் எனும் சொல்லை அவருக்குப் பின்னால் தமிழகத்தை ஆண்ட செல்வி ஜெயலலிதா வலுவாகப் பற்றிக்கொண்டதும், அதை அவ்வப்போது அவையிலும் அரசியல் மேடைகளிலும் தாராளாமாகப் பயன் படுத்தியதும், அனைவரும் அறிந்த ஒன்றாகும். மக்கள் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெறுவதற்கு காரணமாக இருந்த தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக விளங்கிய இந்த நான் எனும் சொல், இவ்விறு தலைவர்களுக்கும் அசுரபலத்தை அளித்து, கட்சியில் இவர்களை எண் ஒன்றாக்கி, மற்ற அனைவர்களையும் பூஜ்ஜியமாக்கியதோ என்று எண்ணத்  தோன்றுகிறது.
    அரசியலில் இவ்விரு நடிகர்களும் பெற்ற மக்கள் செல்வாக்கும் வாக்கு வங்கியும், இன்று தமிழகத்தில் பல நடிகர்களை அரசியல் பிரவேசம் செய்யத் தூண்டுகிறது .தமிழகத்தில் மட்டுமே, திரைப்பட நாயகர்களுக்கும் அரசியலுக்கும் இடையே, நம்பிக்கையூட்டும் பாலம் நிலவுகிறது .ஏனெனில், ஆந்திராவில் என் .டி .ராமராவுக்குப் பிறகு எந்த நடிகரின் அரசியல் முயற்சியும் வெற்றிபெறவில்லை .கேரள மக்கள் நடிகர்களை, நடிகர்களாக மட்டுமே காண விரும்புகின்றனர். கர்னாடகாவில் ரசிகர் கூட்டம் நம்பிக்கையூட்டிய ராஜ்குமாரால் அரசியலில்  காலூன்ற முடியவில்லை.அதே நேரத்தில், தமிழகத்தில் மட்டும் நடிகர்களின் நாடாளும் வேட்கை கூடுதலாகவே காணப்படுகிறது .
   ஆனால் தமிழக மக்களின் வாக்கு வங்கியோ,எம் ஜி ஆர் காலத்திலேயே ஒப்புமையில்லா நடிகராக விளங்கிய, தகுதியிருந்தும் காங்கிரஸ் கட்சியினால் ஒரங்கட்டப்பட்ட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின்னர் தொடங்கிய, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை, ஒட்டுமொத்தமாக நிராகரித்தது என்பது, தமிழக மக்கள் எல்லா நடிகர்களையும் ஒரேமாதிரியாக, அரசியலுக்கு ஏற்றவர்களாகக் கருதவில்லை என்று நிரூபித்தது.
    சிவாஜி கனேசனின் இந்த அரசியல் தோல்வியைக் கடந்து, எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வெற்றியே, இன்றும் பலரது அரசியல் ஆர்வத்தை சுண்டியிழுக்கிறது. கருப்பு எம் ஜி ஆர் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட, பல திரைப்படங்களில் நேர்மையான காவல் துறை அதிகாரியாக வலம் வந்த விஜயகாந்த்,  தனது தே. மு .தி .க காட்சியைத் தொடங்கிய சில வருடங்களி லேயே, தனக்கென சேர்த்த கணிசமான வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டினார். குறுகிய காலத்தில் கம்பபீரமாக வளர்ந்த தே .மு. தி. க கட்சித் தலைவரின் ஆண்மை மிடுக்கும், தன்மான உணர்வும், கூட்டணிச் சகதியில் இடறிவிழ, கூட்டணியினால் அவருக்குக் கிடைத்த வெற்றியைக்காட்டிலும் அரசியல் தோல்விகளே அதிகமானது .அன்று விழுந்த அவர் இன்னும் எழமுடியாமல் தவிக்கிறார் என்பதை இன்றய அரசியல் நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன .
    இப்படி கேப்டன் விஜயகாந்த் நேரடியாக அரசியல் களத்தில்  நிற்க, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோ,அல்லது கமலஹாசனோ, அரசியல் காற்றை அவ்வப்போது சுவாசிக்கின்றனரேயல்லாது இன்னும் வெளிப்படையாக, திட்டவட்டமான முடிவுகளோடு அரசியல் களம் காணவில்லை.
    இந்த இருவரில் ரஜினி உணர்வு பூர்வமானவர், வெளிப்படையானவர் என்பதை, அவரது மேடைப் பேச்சுக்களில் அறியமுடிகிறது .ஆனால் அவரது  வெளிப்படைத் தன்மை வெளிப்படையில்லாத அரசியலுக்கு எப்படி   பொருந்துமோ தெரியவில்லை .மேலும் அவர் 'முத்து 'திரைப்படத்தில் பேசிய 'நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்பது தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவேன்' என்ற வசனம் இன்றுவரை அவரது ரசிகர்களுக்கு, என்றேனும் ஒருநாள் ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கை அளித்துக்கொண்டிருக்கிறது. கமலைப் பொறுத்தவரை, அவர் அறிவுபூர்வமானவர்; அறிவோடு குறும்பும் கலந்தவர் ; அறிவுபூர்வமான குறும்பும் வரவேற்கத்தக்கதே. இருப்பினும், ரஜினியின் ஆன்மீகச் சிந்தனையும் கமலின் அறிவாற்றலும், எந்த அளவிற்கு எம் ஜி ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் கிடைத்த மக்களின் வாக்கு வங்கியை நிலைபெறச் செய்யுமோ தெரியாது.
     ரஜினியைப்போல் கமலைப்போல், இன்று பல ஹீரோக்கள் அரசியல் கனவு காணக்கூடும். இந்த கனவில் தப்பேதும் இருப்பதாகத் தோன்றவில்லை. நடிகர்கள் நாடாளக் க்கூடுமோ என்ற கேள்வி என்னைப்பொறுத்தவரை அர்த்தமற்றதே. இங்கே மருத்துவர்கள், தேநீர் கடைவைத்து உழைப்பால் உயர்ந்தவர்கள், ஐ .ஏ .எஸ் மற்றும் ஐ .பி. எஸ் அதிகாரிகள் என்று பலரும் அரசியலில் பெரும் பங்கு வகிக்கையில், நடிகர்களும் நாடாளப் புறப்படுவதில் தவறேதும் இல்லை .ஆனால் அவ்வாறு அவர்கள் புறப்படுகையில், அவர்களது வெண்திரை மாயையினை மூட்டைகட்டி வைத்துவிட்டு, ரசிகர்களின் புகழாரத்தால் விளைந்த பெருமிதத்தை, புறந்தள்ளி புறப்படுவாராயின் நன்று. "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு .மக்களால் நான் மக்களுக்காகவே நான்" போன்ற தேர்தல் நேரக் கூற்றுகள்  உண்மையான விதைகளாய் வேரூன்று வதையே மக்கள் ஏதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
                                                                                  ப.சந்திரசேகரன் .      

நாடாளும் வேட்கையில் நடிகர்கள்.

     அரசியல் என்பது , வெண்திரையைக் கடந்து வீதிகளில் விளையாடப் படவேண்டிய ஒரு விவேகமான விளையாட்டு. சுதந்திர போராட்டமும், திராவிட இயக்கமும், வீதிகளில் அரங்கேறி, பின்னர் ஆட்சிக் களத்தை அலங்கரித்ததை, இந்தியரும் தமிழரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் சேவைக்காக மட்டுமே,அரசியல் வரலாறு படைத்த மகான்கள் வாழ்ந்த மண்ணில், இன்றைய நிலையென்னவோ வேறுதான். இருப்பினும், வீதிகளே அரசியலின் புறப்பாட்டு தலங்கள் என்பதில், மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.
   ஆனால் வெண்திரையை அரசியலின் கருவறையாக மாற்றியது யார்? திராவிட இயக்கம் தொடங்கியபோதே திரையுலகத் திருவிழாவும் தொடங்கியது என்பது,தமிழகத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையாகும். அண்ணாவும் கலைஞரும் இதற்கு பிள்ளையார் சுழிபோட்டு, பெரும்பாதை அமைத்து கொடுத்தனர். தெருவில் தொடங்கிய இயக்கக் குரல், திரைவழியாக கிடுகிடுவென்று திரையிசைப் பாடல்களாகவும், வசனங்களாகவும், நீரோடை நுழைவதுபோல் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்து, திராவிட இயக்கம் தமிழகத்தை அரசாளச் செய்தது. சுதந்திரத்திற்கு போராடிப் பெயர்பெற்று, அரசாண்ட கட்சி, இன்றுவரை, இழந்த அரசை தமிழகத்தில் மீட்டெடுக்க முடியவில்லை.
     அண்ணாவின் பேச்சாற்றலும் மனித நேயமமும், அவரை மக்கள்பால் வெகுவாக ஈர்த்தது .அதேபோன்று கலைஞரின் சொல்லாண்மை, படைப்பாற்றல், மற்றும் நிர்வாகத் திறன், அவருக்கு மக்களின் செல்வாக்கை ஈட்டித் தந்தது .இதேகால கட்டத்தில் தான், வீதியோடு நில்லாது, வெண்திரை யிலும், திராவிடக் கொள்கைகளையும் சமதர்மக் கோட்பாடுகளையும் தனது திரைப்பட வேடங்கள் மூலமாகப் பரப்பிய எம் ஜி ஆரின் செல்வாக்கு, பன்மடங்கு உயர்ந்து, அரசியலுக்கு வெண்திரையிலிருந்து வீதிவரை, பாலம் அமைத்துக் கொடுத்தது. இந்த இணைப்பால் மக்களிடம் எம் ஜி ஆரின் பிணைப்பு ஆழமாகப் பதிய, ஒவ்வொரு அரசியல் கூட்டத்திலும், அவரின் தோற்றம் திராவிட இயக்கத்திற்கு பலம்  கூட்டியதோடு நில்லாமல், எம் ஜி ஆர் என்னும் மூன்றெழுத்தை அன்றய அரசியலின் தாரக மந்திரமாக்கியது.
     திரைவழியாக மக்கள் மனதில் பதிந்த எம் ஜி ஆர் என்னும் நடிகர், எல்லாத் திரைப்படங்களிலும் ஏழை எளியோருக்காகப் போராடும் நல்லவர் எனும் கதாபாத்திரங்களில் மட்டுமே தோன்றியதாலும், அவரது புரட்சிகரமான பாடல்களினாலும், ஏழை எளியோர், அவரைத் தங்களின் உன்னதமான பிரதிநிதியாகக் கண்டனர். திரைப்படங்கள் மூலமாக எம் ஜி ஆருக்குக் கிடைத்த இந்த அசைக்கமுடியாத செல்வாக்கு பின்னர் அவரை எவராலும் வெல்ல முடியாத தலைவராக உருவாக்கி, அவரது ஆயுட்காலம்வரை மக்களது நம்பிக்கையைப் பெறச் செய்தது.
    எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின்னர்,  எண்ணற்ற திரைப்படங்களில் அவருடன் ஜோடியாக நடித்து, அவரது நிழலாக நின்ற செல்வி ஜெயலலிதா, அவரது  இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். திரைக்கதாப் பாத்திரங்களை வாழ்க்கையின் உண்மையான உதாரணங்களாக, உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களின் அன்பும் பாசமும் விலைமதிப்பற்றவை என்பதை எம் ஜி ஆரும் செல்வி ஜெயலலிதாவும், அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதிலும், அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கக்கூடும் .
      எம் ஜிஆரின் இந்த அரசியல் வெற்றிக்கு அவரது திரைப்படங்கள் மட்டு மல்லாது ஆட்சியைப் பிடிக்குமுன்பே அவர் அண்ணாவுக்கு நெருக்கமானவர் என்பதும், திராவிட இயக்கம் ஆட்சியைப் பிடிப்பதற்கு, அவரின் மேடைத்தோற்ற மும், தேர்தல் நேரத்தில் அவர் குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்ததால் விளைந்த அனுதாப அலையும், பெரும்பங்கு வகித்ததென்றால் அது மிகையாகாது. இவை அனைத்திற்கும் மேலாக எம் ஜி ஆர் திரைப்படப் பாடல்களில் பரவலாக வெளிப்பட்ட 'நான்' எனும் சொல்லின் தாக்கம் அவரை மக்களோடு இணைத்து 'நாம்' என்று சொல்லவைத்தது. இந்த நான் எனும் சொல்லை அவருக்குப் பின்னால் தமிழகத்தை ஆண்ட செல்வி ஜெயலலிதா வலுவாகப் பற்றிக்கொண்டதும், அதை அவ்வப்போது அவையிலும் அரசியல் மேடைகளிலும் தாராளாமாகப் பயன் படுத்தியதும், அனைவரும் அறிந்த ஒன்றாகும். மக்கள் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெறுவதற்கு காரணமாக இருந்த தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக விளங்கிய இந்த நான் எனும் சொல், இவ்விறு தலைவர்களுக்கும் அசுரபலத்தை அளித்து, கட்சியில் இவர்களை எண் ஒன்றாக்கி, மற்ற அனைவர்களையும் பூஜ்ஜியமாக்கியதோ என்று எண்ணத்  தோன்றுகிறது.
    அரசியலில் இவ்விரு நடிகர்களும் பெற்ற மக்கள் செல்வாக்கும் வாக்கு வங்கியும், இன்று தமிழகத்தில் பல நடிகர்களை அரசியல் பிரவேசம் செய்யத் தூண்டுகிறது .தமிழகத்தில் மட்டுமே, திரைப்பட நாயகர்களுக்கும் அரசியலுக்கும் இடையே, நம்பிக்கையூட்டும் பாலம் நிலவுகிறது .ஏனெனில், ஆந்திராவில் என் .டி .ராமராவுக்குப் பிறகு எந்த நடிகரின் அரசியல் முயற்சியும் வெற்றிபெறவில்லை .கேரள மக்கள் நடிகர்களை, நடிகர்களாக மட்டுமே காண விரும்புகின்றனர். கர்னாடகாவில் ரசிகர் கூட்டம் நம்பிக்கையூட்டிய ராஜ்குமாரால் அரசியலில்  காலூன்ற முடியவில்லை.அதே நேரத்தில், தமிழகத்தில் மட்டும் நடிகர்களின் நாடாளும் வேட்கை கூடுதலாகவே காணப்படுகிறது .
   ஆனால் தமிழக மக்களின் வாக்கு வங்கியோ,எம் ஜி ஆர் காலத்திலேயே ஒப்புமையில்லா நடிகராக விளங்கிய, தகுதியிருந்தும் காங்கிரஸ் கட்சியினால் ஒரங்கட்டப்பட்ட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின்னர் தொடங்கிய, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை, ஒட்டுமொத்தமாக நிராகரித்தது என்பது, தமிழக மக்கள் எல்லா நடிகர்களையும் ஒரேமாதிரியாக, அரசியலுக்கு ஏற்றவர்களாகக் கருதவில்லை என்று நிரூபித்தது.
    சிவாஜி கனேசனின் இந்த அரசியல் தோல்வியைக் கடந்து, எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வெற்றியே, இன்றும் பலரது அரசியல் ஆர்வத்தை சுண்டியிழுக்கிறது. கருப்பு எம் ஜி ஆர் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட, பல திரைப்படங்களில் நேர்மையான காவல் துறை அதிகாரியாக வலம் வந்த விஜயகாந்த்,  தனது தே. மு .தி .க காட்சியைத் தொடங்கிய சில வருடங்களி லேயே, தனக்கென சேர்த்த கணிசமான வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டினார். குறுகிய காலத்தில் கம்பபீரமாக வளர்ந்த தே .மு. தி. க கட்சித் தலைவரின் ஆண்மை மிடுக்கும், தன்மான உணர்வும், கூட்டணிச் சகதியில் இடறிவிழ, கூட்டணியினால் அவருக்குக் கிடைத்த வெற்றியைக்காட்டிலும் அரசியல் தோல்விகளே அதிகமானது .அன்று விழுந்த அவர் இன்னும் எழமுடியாமல் தவிக்கிறார் என்பதை இன்றய அரசியல் நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன .
    இப்படி கேப்டன் விஜயகாந்த் நேரடியாக அரசியல் களத்தில்  நிற்க, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோ,அல்லது கமலஹாசனோ, அரசியல் காற்றை அவ்வப்போது சுவாசிக்கின்றனரேயல்லாது இன்னும் வெளிப்படையாக, திட்டவட்டமான முடிவுகளோடு அரசியல் களம் காணவில்லை.
    இந்த இருவரில் ரஜினி உணர்வு பூர்வமானவர், வெளிப்படையானவர் என்பதை, அவரது மேடைப் பேச்சுக்களில் அறியமுடிகிறது .ஆனால் அவரது  வெளிப்படைத் தன்மை வெளிப்படையில்லாத அரசியலுக்கு எந்த அளவிற்கு பொருந்துமோ தெரியவில்லை .மேலும் அவர் 'முத்து 'திரைப்படத்தில் பேசிய 'நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்பது தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவேன்' என்ற வசனம் இன்றுவரை அவரது ரசிகர்களுக்கு, என்றேனும் ஒருநாள் ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கை அளித்துக்கொண்டிருக்கிறது. கமலைப் பொறுத்தவரை, அவர் அறிவுபூர்வமானவர்; அறிவோடு குறும்பும் கலந்தவர் ; அறிவுபூர்வமான குறும்பும் வரவேற்கத்தக்கதே. இருப்பினும், ரஜினியின் ஆன்மீகச் சிந்தனையும் கமலின் அறிவாற்றலும், எந்த அளவிற்கு எம் ஜி ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் கிடைத்த மக்களின் வாக்கு வங்கியை நிலைபெறச் செய்யுமோ தெரியாது.
     ரஜினியைப்போல் கமலைப்போல், இன்று பல ஹீரோக்கள் அரசியல் கனவு காணக்கூடும். இந்த கனவில் தப்பேதும் இருப்பதாகத் தோன்றவில்லை. நடிகர்கள் நாடாளக் க்கூடுமோ என்ற கேள்வி என்னைப்பொறுத்தவரை அர்த்தமற்றதே. இங்கே மருத்துவர்கள், தேநீர் கடைவைத்து உழைப்பால் உயர்ந்தவர்கள், ஐ .ஏ .எஸ் மற்றும் ஐ .பி. எஸ் அதிகாரிகள் என்று பலரும் அரசியலில் பெரும் பங்கு வகிக்கையில், நடிகர்களும் நாடாளப் புறப்படுவதில் தவறேதும் இல்லை .ஆனால் அவ்வாறு அவர்கள் புறப்படுகையில், அவர்களது வெண்திரை மாயையினை மூட்டைகட்டி வைத்துவிட்டு, ரசிகர்களின் புகழாரத்தால் விளைந்த பெருமிதத்தை, புறந்தள்ளி புறப்படுவாராயின் நன்று. "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு .மக்களால் நான் மக்களுக்காகவே நான்" போன்ற தேர்தல் நேரக் கூற்றுகள்  உண்மையான விதைகளாய் வேரூன்றுவதையே மக்கள் ஏதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். 

Tuesday, August 8, 2017

சொல் தோழா!

சொல் தோழா!
துடைப்பான்கள் கொண்டுவா தோழா.
மூட்டை மூட்டையாய் குறுக்கு வழியில்
கொள்ளை அடித்த குபேரர்களின்,
செல்வக் குப்பைகளை கூட்டிப்பெருக்க
உனக்கும் எனக்கும் ஆயுள் போதாது
இங்கே மனித நேயமே மாசுபட்டுக் கிடக்கிறது
ஆலயங்களில் கூட,
போலிப் பிரார்த்தனைகளின் நச்சுக்காற்றால்
மூலப் பிரகாரமே மூச்சுமுட்டிக் கிடக்கிறது.
அங்கே உள்ளே சென்று சுத்தம் செய்ய,
உனக்கும் எனக்கும் உரிமை இல்லை.
ஆனால் உள்ளே இருக்கும் பலருக்கோ,
உள்ளத்தில் சுத்தமின்றி உள்ளிருக்க தகுதியில்லை

 சுத்தமான இந்தியா என்று சூளுரைத்து,
மொத்தமாய் நாடாள முனைவோரின்,
முறையற்ற பேரங்களால், 

சத்தமின்றி இறைவன் பாரதம் துறப்பானோ?,
சொல் தோழா!

                                        ப.சந்திரசேகரன் .      

Sunday, August 6, 2017

The Stepthoughts




    Step by step the thoughts grow.
    Vertical thoughts get stunted,
    By the horizontal howlers,
    Like stepmothers wrong treating kids,
    They did not beget nor willing to bring up.
    Lateral thoughts widen the network
    At the cost of specific thought goals.
    Cyclic  thoughts lead nowhere
    Culminating ever to the current location.
    The mind should be a ladder
    For thoughts stepping up to the peak
    To see face to face what it needs to see,
    Cutting across petty interventions.
    Where thoughts do not get stepped up,
    The mind is deformed to a funeral cart
    Denying to be vertical for the framed time slot
    And pulling steps drastically down
    Before gaining the ground realities.
    It is like digging the grave much ahead
    Of the day, set for the last journey.
                                         P.Chandrasekaran.


 
 
                               

Saturday, July 8, 2017

Language Thoughts.



Language is not a load of thoughts;
It is a game of words targeting ideas,
Trendily, to the victory stand.
The language you speak, grows great,
The way you use it,its beauty to state.
What is said, can never be unsaid.
But what remains untold, can always be told.
Measure the meaning and reach of
What is being said, to make it well said.
Language makes the universe shrink and expand,
Like the moon waning and waxing in a geometric galaxy.
The roads might be racy and ritzy, or rough and battered,
For exciting exits or exclusive entries,
With zebra crossings or zero markings,
With traffic beats and signals, or no streetlights.
They may be easy to deal with or difficult to manage,
Like a jamboree of children in their mixed manners.
You can simply cross them or struggle to navigate,
With your talking GPS often misguiding.
You can choose to travel along the streets and roads,
With your flair for trekking or passion for travelling,
That gets your travel going, as great it shall be.
So are the roads to your preferred language too;
Using the roads shows them, the manner you woo.
                                                    P.Chandrasekaran.
                       

Tuesday, July 4, 2017

இங்கே எதுவுமே.............

இங்கே எதுவுமே மெதுவாயில்ல.
காலத்த எடுத்துக்கோ,
புயலையே புரட்டிப்போடுற வேகம்.
இங்கே எதுவுமே அமைதியா இல்ல
மனச எடுத்துக்கோ,
அதுக்குள்ளாற எப்பவுமே மல்யுத்தம்தான்.
இங்கே எதுவுமே சுத்தமில்ல.
ஆர்கானிக் உணவூன்னு சொல்லி
எத்தனைபேர் நம்மகிட்ட ஆட்டைய போடுறாங்க.
இங்கே எதுவுமே உண்மையில்ல.
அரசியல எடுத்துக்கோ,
அம்புட்டும் அளப்புதான்.
இங்கே எதுவுமே புனிதமில்ல.
கொடும கொடுமைன்னு கோயிலுக்கு போனா,
அங்கே அதுக்குமேல கொடும தாண்டவமாடுது.
இங்கே எதுவுமே தரமில்லை.
வாடகைக்கு போயிட்டதால,
தாய்மைகூட தரமிழந்து தவிக்குது.
ஆமா இப்பிடி பொலம்புறியே நீ யாரு?
அட அது தெரியாமத்தான ஒங்கிட்ட புலம்பிட்டிருக்கேன்.
இங்கே எதுவுமே நெசமில்லே, என்னையுஞ் சேர்த்து. 
                                                                   ப.சந்திரசேகரன்.        

Being Grand.

Being grand is being able to stand apart,
Making a monumental presence in between others.
Not as the lion that stands apart from the other beasts,
Not as matinee idols and men in power,
Manipulating their mega myth ivory towers
Not as world wonders winning their acclaimed attraction,
Not even as God who stands apart from the humans,
Radiating divinely in His exclusive Sanctum Sanctorum,
But as parents and children, with their grand prefixes.
Grand parents may be at the mercy of their children to turn grand;
But grand children have their self declared positions,
By granting grandeur to their parents' parents.
The incessant gift of love,binds two alternate generations
Together, to travel to destinations grander than all that is grand.  
                                                           P.Chandrasekaran.

Tuesday, June 20, 2017

Reading in Between.

Can we read one's mind through their pair of eyes?
At times, eyes speak out the mind like melting ice.
But when we read in between the speaking eyes,
It looks as if, they list out the mind's line of lies.
When words fail to forward messages on a tight rope .
By reading in between, we pluck the roots of hope,
To slip faith on a desperate downgrade slope.
From our first fall till the final,horizontal still,
It is the boggling facts of life that fill the bill.
We understand most often to misunderstand,
Framing all human relationships into a fixed brand.
We play our words safe to pick holes in what others say,
By reading in between, closed expressions in an open way.
A straight deal with the eyes and words,ever steals the sway.
                                                P.Chandrasekaran.

Sunday, June 11, 2017

பெண்மையின் புராணப் புதிர்கள்.


            பெண்மையின் புராணப் புதிர்கள்.

 {மன்னனின் மனைவி ஆனால் அவனின் இதயத்து ராணியன்று}.

     தசரதனும் பாண்டுவும் கண்ணனும் அவரவர்களின் விருப்பங்க ளில் வெளிப்படையாகவே இருந்தனர்.புராணங்களிலும் இதிகா சங்களிலும் பொதுவாக மன்னர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியைக் கொண்டிருந்தனர்.அரசியல் லாபத்திற்காக அல்லது செல்வத்திற்காக ஒரு மனையாளும் இதயத்துக்கு இனியவளாக ஒருத்தியும், இவர்களில் பலருக்கு உண்டு. சுருக்க மாகச் சொல்லப்போனால் மன்னர்கள் இதயத்தால், மனதால், உடலால், பிளவுபட்டிருந்தனர்
    கோசலையின் வேதனை இராமனின் வனவாசச் சோதனை களுக்காக மட்டுமல்லாது அவளைப் பற்றியும் இருந்தது. நாடாளப்போகும் ஒரு மன்னனின் தாயெனும்  பெருமிதத்துடன், கணவன் தசரதனின் அன்பிற்காகக் காத்திருந்தாள் கோசலை. ஆனால் இராமன் வனவாசம் செல்ல, அவளின் அந்த பெருமிதமும் பாழாய்ப்போனது.கைகேயியின் கொடூரக் காதலுக்கு இரையான சோகம், முடிவில் தசரதனை  கோசாலைபால் ஈர்த்தது. ஆனால் கோசலை தனது பெண்மையின் வெற்றியைக் கொண்டாடும் முன்பே, அவள் கரங்களில் மாண்டான் தசரதன்.
    சுயம்வரத்தில் குந்திதேவி தேர்ந்தெடுத்த பாண்டுவோ,தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த பின்னர் மாதுரியை மணக்கிறான். மாதுரியோ கால்நடைகளை பராமரிக்கும் யாதவ குலத்தைச் சேர்ந்த குந்திதேவியை ஏளனமாகப் பார்க்கிறாள். குந்திக்கோ, தனது சக்களத்தியின் அலட்சியத்தை சகித்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தம்.சபிக்கப்பட்ட பாண்டு, இறைவன் ஆசிபெற்ற குந்தி தேவியை இறையருளுடன் இணைந்து,ஆண்மக்கள் பெற்றெடுத்து தாய்மையை கௌரவிக்கச் செய்கிறான்.ஆனால் பள்ளியறைக்கு மாதுரியே எப்போதும் பாண்டுவின் தேர்வு. பால்வினைப் பயனாக பாண்டு மாண்டுப்போக நேரிட, உடன்கட்டை  உரிமை கொண்டாடுகிறாள் மாதுரி. ஆண்மக்கள் ஐவருடன் அலை க்கழிக்கப்பட்ட குந்திதேவி, அரசியாக வாழ்ந்திருக்கவேண்டிய மன்னர் மாளிகையில், அதிகாரத்தின் அள்ளக்கையாக வாழவேண்டிய அவலம் ஏற்படுகிறது.
    மாறுபட்ட விசுவாசப்  பரிமாற்றத்தின் விளைவாக கண்ணனை மணக்கும் சத்யபாமா, செல்வச்  செழிப்புடன் சயமந்தக ஆபரணம் உட்பட அனைத்தும் பெற்றிருந்தாலும், சிசுபாலனின் கோரப்பிடியிலிருந்து ருக்மணியைக் கடத்திச் செல்கிறான் கண்ணன். ஒருமுறை நாரதரின் போதனையால் உந்தப்பட்டு கோசலை ஏலத்தில் கண்ணனை எடைக்கு எடை தங்கமும் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் கொடுத்து தன்வயப்படுத்த முயல, அத்தனை செல்வத்தையும் தாண்டி கண்ணன் கனக்கி றான். ஆனால் பின்னர் ருக்மணியோ, ஒரே ஒரு துளசியை தராசின் ஆபரணப் பகுதியின்மேல் வைக்க, தராசு சமமாகி, செல்வத்தைக் கடந்து, கண்ணன் அன்பால் வெல்லப் படுகிறான்.
                       சொர்க்க மரம்:-
   பாரிஜாத மரச் சம்பவமும் படிப்பினை ஊட்டுவதாகும். கதை யின் ஒரு விளக்கத்தின்படி கண்ணன் பாரிஜாதச் செடியை நட்டு அதன் மலர்கள் அனைத்தும் ருக்மணியின் தோட்டத்தில் விழச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், கதையின் இன்னொரு விளக்கமோ, சொர்க்கமலர் சத்யபாமாவுக்குச் சொந்தமானது என்றும், ஆனால் மலர்கள் கண்ணன் ருக்மணி யோடு இருக்கும் வேளையில் மட்டுமே மலரும் என்றும்,கூறுகிறது. மலர்களுக்குச் சொந்தம் கொண்டாடும் சத்யபாமாவின் நினைவலைகளில், அவள் கணவன் வேறொரு பெண்ணோடு பிணைந்திருக் கிறான் எனும் ஆதங்கம் அகலாதிருக்கும்.
    தசரதனும் பாண்டுவும் கண்ணனும், தாங்கள் வேலிதாண்டிய வெள்ளாடுகளாகவும், மற்றொரு பெண்ணை தங்கள் மனைவி மார்களுக்கு எப்போதும் நினைவுறுத்தும் காரணிகளாகவும் இருக்கிறோம் எனும் உண்மை நிலையினை, ஒருபோதும் கண்டுகொள்ளாதவர்களாகவே இருந்தனர். புறக்கணிக்கப்பட்ட இவர்களின் மனைவிமார்கள் மீது நாம் பரிவுகாட்டும் அதே நேரத்தில், தாங்கள் நேசிக்கும் மற்றொரு பெண்ணையும், வஞ்சிக்கும் ஆடவர்களாகவே இவர்கள் இருந்தனர் என்பதை, நாம் மறுப்பதிற்கில்லை.
     Modest translation of "Feminine Mythique"{King's Wife but not the Queen of his heart} Published in the Friday Review Supplement 9th June, 2017, by Arshiya Sattar}
                                                                                   P.Chandrasekaran.