Tuesday, October 31, 2017

Two Ghosts on a Halloween Day



Ghost I

Remember!,
Who made you,made me too.
It is not that I should woo a figure like you,
Just because the same hands made us two.
I curse the hands that made me look small
When you stay tall in the  Halloween  hall.
My baby face is cruder than the painted balloons.
To hell with the guy who cast me as one among the buffoons,
When I am fit enough to find a place in a gang of goons.

Ghost II

Listen!
Each one gets what they deserve
Not only when they live but also after.
I adore the pair of hands born to serve;
The hands that made me reflect my chapter.
Jealousy is human and not the character of a ghost.
Don't think I say these words strutting only to boast;
Let us celebrate Halloween, hailing the skill of our maker,
But for which, we would have made our tombs ever darker.
                                                P.Chandrasekaran.



Monday, October 30, 2017

அன்னையின் பரிசு .



   தமிழகத்தின் ஸ்ரீவைகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த சண்முக கவிராயர் எனும் புனிதரின்  மனையாளும்,  மதம் போற்றும் மனமுடையவராக இருந்தார். அவர்கள் தங்கள் மகனுக்கு குமர குருபரர் என்று பெயர் சூட்டினர். ஆனால் குழந்தை பேசமுடியாத நிலையினைக்கண்டு, பெற்றோர் பெரிதும் கவலையுற்றனர். அவர்கள் மகனுக்காக,  சண்முகநாதனை வழிபட திருச்செந்தூர் சென்றனர்.
    ஒருநாள்  குமரகுருபரர் பேசத் தொடங்கினார்.  அவர் கவிஞர் ஆனார்.  சண்முகநாதனுக்கு தனது நன்றியைத் தெரிவிக்க, நாதனைப்புகழ்ந்து கவிதை புனைந்து, அக்கவிதைத் தொகுப்பினை 'கந்தர் கலிவெண்பா ' என அழைத்தார். அத்தொகுப்பின் இறுதிப்பாடலில்,"இறைவா உன் தாமரைப்பாதத்தைக் காண்பித்து எனக்கு ஆசி அருள்வாயாக" என்று வேண்டினார்.
   குமரகுருபரர்  தனது ஆசிரியர் மாசிலாமணி தேசிகரிடம், மிகுந்த மரியாதை கொண்டு, அவருக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான், 'பண்டார
மும்மணிக்கோவை' எனும் கவிதை புனைந்தார்.
    குமரகுருபரர் மதுரையில் இருந்தபோது  'மீனாட்சி பிள்ளைத்  தமிழ்' எனும் கவிதை புனைந்தார். அவர் இக்கவிதைத் தொகுப்பை புனையும்போது, தேவி ஒரு சிறுமியாக இருந்தார் என்கிறார்,திரு. மலையமான் தனது சொற்பொழிவில். தேவி  மீனாட்சியே இக்கவிதை தொகுப்பினை கேட்டு,  ரசித்ததாகச் சொல்லப்படுகிறது. குமார குருபரரின் அற்பணிப்பில்  திளைத்த தேவி, அவருக்கு ஒரு முத்து மாலையினை பரிசாக அளித்தார்.
   இப்புனிதர் வாரனாசி சென்று அங்கு நீண்டகாலம் தங்கியிருந்தார். வாரனாசியிலும் தனது ஆன்மீகச் சேவையினைத் தொடர்ந்தார். அங்கே இருக்கையில், 'காசி கலம்பகம்' எனும் நூலையும், விநாயகர் பற்றிய படைப்பையும் உருவாக்கினார். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டது, துரதிஷ்டவசமாக நமக்கு கிட்டாத இழப்பாகிவிட்டது.
   குமரகுருபரர் வாரனாசியில், இந்தியிலும் தனது சொற்பொழிவுகளை வழங்கினார். கம்பராமாயணத்தைப் பற்றிய அவரது சொற்பொழிவுகள் துளசிதாசரை வெகுவாகக் கவர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தியைத் தாமொழியாகக் கொண்டவர் முன்பாக,இம்மேதை ஆற்றிய சொற்பொழிவு களே,அவருக்குக் கிடைத்த புகழாரமாகும். 
'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 26,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான " A Gift from the Goddess"  எனும் கட்டுரையின்  தமிழாக்கம்'}
                                                                                         ப.சந்திரசேகரன் .  

Wednesday, October 25, 2017

மூன்று தடைகள்.

    சைவ சித்தாந்தத்தில் மூன்று மைய்யக் கோட்பாடுகள் உள்ளன. அவை 'பசு ' 'பதி' 'பாச' என்பதாகும். 'பதி' என்பது இறைவனையும் 'பசு' மனித ஜீவாத்மாவையும் 'பாச' என்பது அகந்தை{Ego}, மாயை, மற்றும் கர்மவினையினை குறிப்பதாகும்.
  அகந்தை, மாயை, கர்மவினை மூன்றும் நம் ஆன்ம விமோசனத்திற்கும் விடுதலைக்கும், தடைகளாகும். இவற்றிலிருந்து விடுபடமுடியாதவர்கள், சில விரும்பத்தகாத குணங்களை வெளிப்படுத்துகின்றனர் என்று தனது சொற்பொழிவில் சரளா ராஜகோபாலன் விளக்குகிறார். அவர்கள் பேராசைகொண்டு, எதையும் 'போதும்' என்று சொல்லமுடியாமலிருக்கின்றனர்.
     நமது ஆசைப்பட்டியல் அதிகமாகி, அனைத்தையும் நிறைவேற்ற முயலும்போது, நாம் ஏமாறப்போவது தவிர்க்கமுடியாததாகும். ஒன்றை அடைவதில் நாம் முனைப்புடன் இருக்கையில், சிறிய ஏமாற்றம்கூட நமக்கு  தாங்க முடியாததாகிறது. இதன் விளைவாக நாம் அவலமைடைகிறோம்.
     வாழ்நாள் முழுவதையும் செல்வம் தேடுதலில் செலவிட்டு, மேற்கொண்டு செல்வம் ஈட்ட இயலா நிலையில் அலைக்கழிக்கப்பட்ட நாம், இறைவனிப்பற்றி சிந்திக்கக்கூட இயலாமல் ஆகிறோம். ஆனால் இறைவனை ஆழ்ந்து நேசிப்பவன், அன்பே இறைவனென உணருகிறான். அறிவீலிகள் அன்பும் இறைவனும் மாறுபட்டவை என நினைக்கின்றனர்.முற்றுணர்ந்த  ஆன்மாவோ "அன்பே இறைவன் இறைவனே அன்பு" எனபதை உறுதிபட அறிகிறது.
     இதனையே திருமூலர் அன்பும் இறைவனும் பிரிக்கமுடியாதவை என்றும், இரண்டும் ஒன்றுபட்ட நிலையே என்றும், எடுத்துக்கூறுகிறார். இறைவன் அன்பின் மறுஉருவமாகிறார்; நாம் அவரின் அருளைப்பெற தகுதியடைய வேண்டும். அன்பால் நம்மை அர்ப்பணிக்கும் வாழ்க்கையில், இறைவனே நம்மிடம் வருகிறார்.
   மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது கொண்டுள்ள மட்டற்ற பக்தியினால், அவரை அடையும் நிலை அறியா பரவசத்தில் இருந்தார். ஆனால்  சிவபெரு மானோ, பக்தனின் பரவசத்தைப் பக்குவப்படுத்தி, அமைதிப்படுத்தி, தன் பாதம் காணும் பாக்கியம் தந்தார். மாணிக்கவாசகர் இறைவனின் கருணையை தனது திருவாசகத்தின் மூலம் கொண்டாடினார். சிவனைத் தவிர வேறு எதற்கும் தனது சிந்தனையையும் நேரத்தையும் ஒதுக்க மாணிக்கவாசகர் தயாராக இல்லை. இறைவனும், இப்புனிதரின் அன்பிற்கு இணையான கைம்மாறு புரிந்தார்.

{'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 24,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான " The Three Hurdles"  எனும் கட்டுரையின்  தமிழாக்கம்'}
                                                                                         ப.சந்திரசேகரன் .  

Monday, October 23, 2017

சொல் தோழா!

சொல் தோழா!
உரிமை உனக்கும் எனக்கும் பொதுவன்றோ ! 
உன்கை ஓங்கிட என் கரங்கள் கட்டுமோ ?
என்குரல் எழுப்பிட, உன்குரல் ஆணையோ?
அரியணை ஏறிட ஆணவம் மகுடமோ?
பறிபோன உரிமைகள் பாவத்தின் பாரமோ?
சரியென்றும் தவறென்றும் இருவழிகள் இருக்க,
பதவியில் பயணிக்க இருவழியும் சரிவழியோ?
கட்டவிழ்த்த காளைக்கு கொம்புகள் ஆளுமெனில்
கட்டிய கரங்களை, காத்திடக் கால்முளைக்கும்.
எதிர்த்திடும் உரிமைகள் இயல்பென நீ உணர,
விதித்திடும் ஆணைகள் வெறுப்பினைக் வேரறுக்கும்.
எதிர்ப்பினை நீ நெறிக்க, புதுப்புது பிழம்பாகும்
என்னுரிமை எனதாகின் உன் உயரம் உனதாகும்.
என்னுரிமை நீபறிக்க உன் இரங்கட்பா எனதாகும். 
                                                                 ப.சந்திரசேகரன் .  

Tuesday, October 17, 2017

நாளும் தீபவாளி.

நட்புகள் கூடிட , நன்மைகள் கோடி,
உட்புறம் ஒளிபெற, உலகுக்கது ஒளியாம்.
அற்புதம் அனைத்தும் அன்பினில் அரும்பிட,
விற்பனைக் கடங்கா வியப்பினைப் போன்று,
சிற்பியின் உளியினில், சீர்பெறும் இறைமையை,
பொற்பாதம் தொட்டு புதுப் பொலிவடைவோம்!
நிற்பதும் நடப்பதும் நீதியின் நிழலெனின்,
கற்பதும் கேட்பதும் காலத்தில் நிலைத்து,
முற்பகல் வினையின் முட்கள் களைந்து,
கற்புடன் தீபத்தை காணிக்கை ஆக்குமாம் !
தற்புகழ் தோற்பது தவப்பயன் ஆகிட, 
நற்பணி யாற்றலே தீபத்தின் ஒளியாம்.  
                                                        ப.சந்திரசேகரன் .  

Wednesday, October 11, 2017

விதுரரின் பணிவு.



   "இங்கே எதையுமே நமதென்று கோரும் உரிமை நமக்கில்லை" என்று உணர்ந்தவர் ஒருசிலர்கூட இல்லை. மற்றவரிடமும் நமக்கு உரிமை ஏதும் இல்லை. மோட்சப் பயணத்திற்கான  முதல் படியே, நமது வாழ்வில், பொருட்களிடமோ அல்லது நபர்களிடமோ, உடமை உணர்வுக்கான இடமில்லை என்பதை புரிந்துகொள்வதுதான்.
 "நான், எனது என்பதை விட்டொழியுங்கள்" என்கிறார் நம்மாழ்வார். நான் என்பதை வேரறுக்கவேண்டும் என்கிறார் அவர். பகவத் கீதை முழுவதிலும் இந்த செய்தியே காணப்படுகிறது என்றார், திருமதி சரளா ராஜகோபாலன் தனது சொற்பொழிவில்.
   வாழ்க்கையில் ஒருவரது மனநிலை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான ஒரு அருமையான உதாரணத்தை நாம் மகாபாரதத்தில் பார்க்கிறோம். கிருஷ்ணபரமாத்மா துரியோதனனைக் காணச் செல்கிறார். பாண்டவரின் தூதராக அவரது வருகையின் நோக்கம், துரியோதனனை நியாயமாக இருக்கும்படியும் பாண்டவருக்கு அரசவையில் அவர்களுக்குரிய பங்கினை கோரவும் தான்.
     கிருஷ்ணரின் தேர் ஹஸ்தினாபுரிக்குள் நுழைகிறது. நகரத்தில் உள்ள ஒவ்வொரு மாடமாளிகைக்கும் வெளியே நின்று, "இது யாருடைய வீடு" என்று வினவுகிறார் கிருஷ்ணர். ஒவ்வொரு இல்லத்தின்.  சொந்தக்காரரும் ஒருவர்பின் ஒருவராக "இது எனது இல்லம்" என்கின்றனர் மேலும் ஒவ்வொரு வரும் "கிருஷ்ணா வருக வருக என்னுடன் தங்கிச் செல்க" என்கின்றனர் கிருஷ்ணபரமாத்மா எவரின் அழைப்பையும் ஏற்காத நிலையில்,தேர் நகர்கிறது.     இறுதியில் தேர் விதுரரின் இல்லத்தை அடைகிறது."இது யார் வீடு" என்கிறார் கிருஷ்ணர் அதற்கு விதுரரோ "எல்லாம் உன்னிடமிருந்துதானே வருகிறது. இந்த வீடும் உன்னடையதுதானே கிருஷ்ணா. உன்னுடைய வீட்டிற்கு நீவர அனுமதி கோரவேண்டுமா? அல்லது அழைப்பிற்காக காத்திருக்க வேண்டுமா? "என்கிறார்.
     விதுரரின் பதிலில் நிறைவுகண்ட கிருஷ்ணர், அவருடன் தங்க முடிவு செய்கிறார். துரியோதனன் உட்பட பலரது அழைப்பையும் ஒதுக்கித்தள்ளினார் கிருஷ்ணபரமாத்மா. இறைவனுக்கு ஒருவன் மன்னனோ அல்லது பரதேசியோ என்பதுபற்றி அக்கறையில்லை. பணிவுள்ளவரே இறைவனின் ஆசியைப் பெறுகின்றனர். விதுரர் தனது பணிவால் இறைவனைக் கவர்ந்து ஆசியைப் பெற்றார்.
{  'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 11,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான "Vidhura's Humility"  எனும் கட்டுரையின்  தமிழாக்கம் ' }
                                                                                                     ப.சந்திரசேகரன் .  

Monday, October 9, 2017

மாயா.

மனிதனுள்,
மிருகத்தின் எடை கூடிக்கொண்டே செல்கிறது.
மனதை உடல் தின்றுவிட, மாமிசமே மிஞ்சுகிறது.
அசையும் மாமிசத்திற்கு ஆயூதங்களே அரிச்சுவடி.
ஆன்மீகத்தில் அரசியல் சாயமில்லாக் காலங்களில்,
ஆன்மா உடலுக்கு அங்குசமானது.
அரசியல் மதத்தினில் மாமிசம் கலந்திட,
அதுவே ஆலாகால விஷமானது.
விடியலுக்குத் தேவை,
வியர்வையைப் போற்றிடும் உடல்.
உழைப்பினில் உலகை உள்ளடக்கும் உடல்.
உடலே ஆயுதமானால் உலகம் பாழாகி,
கடலில் கரைத்த  பெருங்காயமாகுமோ,
விடையறியா மாயமாய் மனம்?
                                                  ப.சந்திரசேகரன் .  

Friday, October 6, 2017

தேவியின் மகிமை

 

     காலம் காலமாக தேவி வழிபாடு நடைமுறையில் உள்ளது. மத நூல்களும், புராணங்களும், இறைவழிபாட்டுப் பாடல்களும், இந்த தேவி வழிபாடு, அழகும் சத்தியமும் ஒருங்கிணைந்து தேவியின் வடிவாக உச்சமடையும் அகநிலை அனுபவத்திலிருந்து சுரக்கின்றது என்று, வெளிப்படுத்துகின்றன.
    'தேவி பகவத்கீதையில்', தேவி தனது தந்தையார் ஹிமாவனிடம் இவ்வாறு உரைக்கிறார். "மலைகளின் அரசனே! இந்த அகிலமும் அசையும், அசையா அனைத்தும், எனது மாயசக்தியால் உருவாக்கப்படுகிறது.இந்த மாயை என்னுள் கருத்தரிக்கிறதேயல்லாது, உண்மையிலேயே என்னிடமிருந்து மாறுபடுவதோ பிரிக்கப்படுவதோ இல்லை.எனவே நானே இங்கு சர்வ சித்தி யாகிறேன்.நடைமுறையில்  மாயா என்று தோன்றினாலும்,என்னையன்றி வேறு சித்தியில்லை".மேலும் ஹிமாவனிடம் தேவி கூறுவதாவது "எப்பொழு தெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் தலையெடுக்கிறதோ, நான் வேறு வடிவங்களில், மாறு வேடங்களில், உருவெடுக்கிறேன்"
   "இது பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா அவ்வப்போது, தர்மம் தாழ்கையில் அதனை நிலைநிறுத்த தான் தோன்றுவதாக, பிரசித்திபெற்ற வாக்காகக் குறிப்பிடுவதற்கு, நேரிடையாகத் தொடர்புடை யதாகும்" என்று ஒரு சொற்பொழிவில், திரு B. சுந்தர்குமார் குறிப்பிட்டுள்ளார். எனவே தேவியின் அவதாரங்களும் மாறு வேடங்களும், குறிப்பிட்ட தேவைகளுக்கேயாகும்.
     இதனைப் பின்பற்றி திரேதா யுகத்தில் தேவி, ராமனின் வடிவமெடுப்ப தாகவும் சிவபெருமான் சீதையின் உருவமெடுப்பதாகவும், மற்றும் நந்தி அனுமன் வடிவமேற்பதாகவும், ஒரு சிந்தனைப்பள்ளி ஒப்புக்கொள்கிறது. இக்கருத்தினை மேலும் மேம்படுத்தி, இராவணன் சிவபெருமான் மீதுள்ள பக்தியினாலேயே, அவர்  வடிவமேற்றுள்ள சீதையினை இலங்கைக்கு கடத்துவதாகவும், வால்மீகி இராமாயணத்தை மேற்கோள் காட்டி விளக்குரைஞர்கள்  கருத்து தெரிவிக்கின்றனர் .அயோத்யா காண்டத்தில் இராமன் தனது கதாபாத்திரத்தினை செவ்வனே நடித்திடும் வகையில் சீதையை வனவாசத்திற்கு கூட்டிச் செல்ல மறுக்கிறான்.
   பின்னர் சீதையும் தனது மூலமுதலான உணர்வினைப் பெற்று, தான் நாடகத்தை அரங்கேற்றுகிறோம் என்பதையும் மறந்து, இராமன் ஆணுடையில் இருக்கும் ஒரு பெண் மட்டுமே என்றும், இந்த உண்மையினை அவளது தந்தை பார்க்கத் தவறிவிட்டார் என்றும் கூறுகிறாள்.
 {  'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 04,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான "Supremacy of Devi"  எனும் கட்டுரையின் சுமாரான தமிழாக்கம் ' }

                                                                                                           ப.சந்திரசேகரன் .  

Break ! Break ! Break !


We break our heads
For several breakthroughs in life.
Be it romance or rivalry or a range of routes.
The break up figures are not easy to crack.

When efforts break down,
Some get heart- broken;some stay rocky.
Some apply a timely tacit brake
To thwart a break down.

Those who bluntly break away,
Leaving trust in the lurch,
Break the norms of collective goals,
Betting for a space for the back stab.

When illusions break out as deeds
Not binding on precepts of faith,
Life's breakthroughs break into fragments,
Staying as the embers of a broken burnt wood.
                                             P.Chandrasekaran.

Sunday, October 1, 2017

The Mahatma.



Mahatma is mainly, a mind conquering concept,
Encrypted evenly, in myth, mystery and miracle.
The breath of a Mahatma is a pulmonary protocol 
That inhales the oxygen of love to lift all from a fall.

For an ever occupied, underground octopus mind,
A misty might,seems to misgovern the studded sky.
But a Mahatma's meek manifestation of mind mold,
Shows actions triggered by a shooting vision of hold.

Self- automated saintly visions, surge into actions,
To surpass the self and solve the maze of the mist.
Visions are not arched from outstanding springs.
As their genesis within,demystifies the inner rings.

A Mahatma meddles not with a misty goal, but meets it,
Without masterminding murky, manipulative, measures.
Mahatma has no itch for leadership, or its load of tributes.
Though it has a line, faithfully bound to its radiant routes.
                                                           P.Chandrasekaran.

The Nuke Norms.

                    I
Strike when you are weak,
Your courage will stand up and speak.
Strike when you are strong,
To make it right, though you are wrong.
                   II
Shudder a strike, to announce,
If you know your strikes are bound to bounce;
Shiver not a strike to pronounce,
Being sure,your enemies,you will trounce.
                    III
Be discreet not to strike
Just to enable your rivals, to think alike;
Be upright to annul an attack,
With a placard of peace,on the right track.
                    IV
Be human never to strike at all.
Because it drives one side, to a fatal fall.
One's fall, does not make the other tall;
Let the truth of truce, be the nuke's pall.
                                             P.Chandrasekaran.