Tuesday, November 28, 2017

திருத்தியபடி

அரக்கர்கள் ஆள அறமது வெல்லுமோ?
சுரப்பது அனைத்தும் பாலென் றாகுமோ?
விரக்தியை விதைக்கும் வேட்டையர் ஒன்றாய்,
இருக்கையில் அமர்ந்திட இதயம் பதைக்குமோ ?
நரித்தனம் செய்து நாணயம் புதைப்போர்
நிரப்பிடும் அணிகள் நிலைப்பது நிஜமோ?
உரைத்திடும் அவர்தம் உளறல்கள் கேட்டு
சிரித்தலும் நமக்கு சிந்தனைக் கேடே!

பிரித்து மேய்ந்திடும் பாவிகள் இடையே,
மருத்துவ மனைகளும் மர்ம தேசமே!
சரித்திர ஏட்டினில் சாயம் கலந்திடின்,
கரித்துகள் போன்ற களங்க மனைத்தையும்,
எரித்துச் சாம்பலாய், இழிநிலைக் களைந்து,
திருத்திய பதிவுகள் திறம்படத் தொகுப்போம் !
                                                  ப.சந்திரசேகரன் .  




Saturday, November 25, 2017

பொருள்

பரம்பொருள் என்கையில்,,
இறையும் ஒரு பொருளே!
கரம்கொண்டு தொழுகையில்,
காட்சியெல்லாம் பொருளே!
மரத்தின் வேரென்றும்
மண்ணுக்குள் பொருளே,
விரல்சுண்டிக் காட்டுதல்,
வேண்டப்படும் பொருளே.
இருளறியா பொருளனைத்தும்
வெளிச்சத்தின் பொருளே.
வரம்வேண்டிப் பெறுபவை
வாழ்க்கையின் பொருளே.
உருமாறிப் போனாலும்,
ஒவ்வொன்றும் பொருளே.
பொருள்படக் கூறா,
பொருளிங்கே உண்டோ?
அருள்தரும் பரம்பொருளே,
ஆயுளின் பொருளுணர்த்தும்,
அகமறிந்த மெய்ப்பொருளாம்!.
                               ப.சந்திரசேகரன் .  



Battle to Live.

You cannot kill me by a poison quote
As my cheering stuff is my antidote.
You cannot hang me by a noose;
My buoyancy will break it loose.
You cannot crave to drown me ever;
My teeming tears will over power.
Nay, neither can you burn me to ashes
I am not meant for flammable flashes.

No fall from any spot ever so high
Shall claim my life for the worst try.
Suicide is a stooge of weak minds,
Against which I have my stoic blinds.
Life's beauty is not for despair to stifle;
Nor for death that strikes, just for a trifle.
                                                P.Chandrasekaran.

Friday, November 17, 2017

மாயா


மாயா!
முடிவில்லாக் கதைக்கு முடிச்சுகள் பலவாம்!
முடிச்சுகள் அவிழ்ந்திட மூலைக்கோர் முடிச்சாம்!
அவிழ்ந்ததோர் முடிச்சுகள் ஆளுக்கோர் திசைகாட்ட,
ஆள்காட்டி விரலுக்கு ஆனைபோல் வீக்கமாம்!
முண்டி யடித்து முறையிலாக் குற்றங்கள்,
கண்ட திசையெலாம் களவென புரிந்தோர்,
நண்டுப்பிடியிலும் நாளுக்கோர் நழுவலாம்;
இண்டு இடுக்கெல்லாம் இருட்டென இணைத்து,
குண்டுப்  பெருச்சாளியாய் பெருக்கிய கொள்ளை,
தொண்டுப் பலனோ தோண்டிய குழியோ?
கெட்டும் கெடுத்தும் கட்டிய கோட்டை,
வெட்டிய குழியினுள் வீழ்ந்திடு மாயின்,
எட்டிய உயரம் கர்ப்பக்ரஹமோ காராக்ரஹமோ?
                                                                 ப.சந்திரசேகரன் .  

சொல் தோழா!

சொல் தோழா!
காலில் செருப்புகூட இல்லாமல்,
காலமெல்லாம் சொத்து சேர்த்தாயே !
நீ சேர்த்த சொத்து உன்வாரிசுகள்,
கால் நோகாமல் வாகனத்தில் செல்வதற்கோ?
உன் வாழ்க்கை உன்கையில் என்று சொல்கையில்,
உன்வாழ்கை உனக்கும் தானே?
உன் உடலை நோகடித்து,
உன் சந்ததிக்கு சொத்து சேர்த்தல்,
நீ உன் உடலுக்குச் செய்யும் துரோகம்தானே?
வாழ்நாள் முழுவதும் உன் உயிரை சுமக்கும் உடலுக்கு,
நீ செலுத்தும் மரியாதைதான் என்ன?
தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் என்பது,
தரம் தாழ்ந்த நிலையே.
ஆனால் தன்னைப் புறக்கணித்து,
ன் வம்சம் வாழ நினைப்பது,
உன் பிறவிக்கே நீ செய்யும் துரோகமன்றோ!
நீ என்ன தொழில் செய்கிறாய் என்பது முக்கியமில்லை;
உன் தொழிலின் உண்மை உன்னை உயர்த்தும்.
இருப்பினும் உன்னையே உதாசீனம் செய்து,
சந்ததிக்கு நீ சேர்க்கும் செல்வம்,
நீ வாழும்போதே  உன்னை சுமக்கும் சவப்பெட்டியே! 
                                                              ப.சந்திரசேகரன் .  

Wednesday, November 15, 2017

Between the Head and the Heart.




Your love,
Created a heart in me,
To know what love means.
As my heart started beating
It struck me with a hunch.
Love has its fugitive's faster beats.
It beats like the heart of a new born.
New born love, knows no direction.
It beats with a reckless roller coaster rhythm.
Is headway better than the heart way?
Your love said "one's heart shall beat,
As per the directions of one's head"
Then your fixed a head in me,
To reckon the beats of my heart.
Now my heart beats the way it should,
With a tacit direction from your love.
I also now know, love is both a matter of
The head and heart, in their unison.
My Love,
Where do you owe your head and heart?
                                                                   P.Chandrasekaran.

Sunday, November 5, 2017

Fenced Fears.















I put fences against my illusions.
My illusions encircled me as fences.
The waves of fear surpassed the shores.
Danger is not in what is happening,
But in the fears of what is to happen.
There is no risk allowance
Against wanton, risky thinking.
If bubbles and balloons are feared as bombs,
The brain becomes a nuclear station.
Serpents are not static ropes;
Nor do ropes wriggling in the wind,
Transform into hooded snakes.
Self-hoodwinking breaks the shelters,
In search of new fences for defense.
Hallucination is the haberdasher 
Of a haunted mind, weaving new threads
Of fences to field, fresh, frustrating, fears.
                                       P.Chandrasekaran.

Wednesday, November 1, 2017

ஒரு பக்தனின் அன்பிற்கு அடிமை.

     இறைவன் சர்வவல்லமை வாய்ந்தவன்; எல்லாம் அறிந்தவன்; எங்கும் நிறைந்தவன். இருப்பினினும், ஒரு பக்தனின் அன்பினில் அவனை அடிமைப்படுத்தமுடியும் என்கிறார், தனது சொற்பொழிவில் சரளா ராஜகோபாலன்.
    புனிதன் வள்ளலாரும், இறைவனின் இப்பண்பினை வர்ணிக்கிறார் இறைவன் மலையைப்போன்றவன் என்றும், ஆனால் அவன் தன பக்தனின் கரங்களில் குடியிருக்க வருவான் என்றும் கூறுகிறார், வள்ளலார்.
    மன்னாதி மன்னனாகிய இறைவன், ஏழை பக்தனின் குடிலில் வந்தேரத் தயங்கமாட்டான். அமரத்துவம் அளிக்கின்ற அமுதத்தைப் போல், அடைவதற்கு கடினமானவன் இறைவன். ஆனாலும், பக்தனின் கரங்களில் தங்கிட., பொங்கி மகிழ்வான். ஆழ்ந்து விரிந்த கடலைபோன்றவனாகினும், பக்தனை வந்தடைவான். ஒளியேற்றும் ஞானத்தின் வடிவானவன்; ஆனாலும் பக்தி என்னும் அணுவினில்   டங்குவான்.ஒரு   உண்மையான  பக்தன்     இறைவனை  ன்  அன்பினால் கட்டிப்போடுவான்.
     வில்லிபுத்தூராரின் மகாபாரத தமிழ் வடிவத்தில், பாண்டவர்களின் தூதராகப் புறப்படுவதற்கு முன்னால், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அணுகி அவர்கள் கருத்துக்களை அறிய முற்படுகிறார் கிருஷ்ணபரமாத்மா.
     தர்மன் அமைதியை விரும்புவதாகக் கூறுகிறார். பீமன், அர்ஜுனன், நகுலன் மூவரும் போரை விரும்புகின்றனர். பின்னர் கிருஷ்ணன் சகாதேவனை தனியே அழைத்து, அவன் என்ன விரும்புகிறான் என்று வினவுகிறார்.அதற்கு, இறைவனின் எண்ணமே இறுதியானது என்பதை உணர்ந்த, ஞானியாகிய சகாதேவன், "நீ என்ன விரும்புகிறாயோ அதையே நானும் விரும்புகிறேன்" என்கிறான்.
    போரினைத் தடுக்க அதற்கு கருத்துக்கூறியே ஆகவேண்டும் என கிருஷ்ணன் வலியுறுத்த, "கர்ணனை மன்னனாக்கு; பீமனைக் கட்டிப்போடு; உன்னையும் கட்டிப்போட்டாகவேண்டும்" என்று பதிலளிக்கிறான் சகாதேவன். அதற்குக் கிருஷ்ணன், "ஒருவேளை மற்ற இரண்டும் நிறைவேற்றப்படலாம்; ஆனால் என்னை எப்படி கட்டிப்போடுவாய்" என்கிறார்.
   அதற்கு சகாதேவன், கிருஷ்ணன் உண்மையான உருவத்தை காண்பித்தால் தான்  கட்டிப்போடுவதாகக் கூறுகிறான். கிருஷ்ணன் தன் விஸ்வரூபத்தைக்  காண்பித்து சாகாதேவனுக்கு தன்னை கட்டியிடும் வலிமையையும் அளிக்கிறார். பின்னர் தன்னை விடுவிக்குமாறு அதே சகாதேவனை யாசிக்கிறார் கிருஷ்ணன். பாண்டவரின் வெற்றிக்கு கிருஷ்ணன் உறுதிகூற,  கிருஷ்ணனை விடுவிக்கின்றான், ஞானியாகிய சகாதேவன்.
{இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 30,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான, "  Slave to a Devotee's Love" எனும் கட்டுரையின் தமிழாக்கம்'}
                                                                                         ப.சந்திரசேகரன் .