Friday, November 17, 2017

மாயா


மாயா!
முடிவில்லாக் கதைக்கு முடிச்சுகள் பலவாம்!
முடிச்சுகள் அவிழ்ந்திட மூலைக்கோர் முடிச்சாம்!
அவிழ்ந்ததோர் முடிச்சுகள் ஆளுக்கோர் திசைகாட்ட,
ஆள்காட்டி விரலுக்கு ஆனைபோல் வீக்கமாம்!
முண்டி யடித்து முறையிலாக் குற்றங்கள்,
கண்ட திசையெலாம் களவென புரிந்தோர்,
நண்டுப்பிடியிலும் நாளுக்கோர் நழுவலாம்;
இண்டு இடுக்கெல்லாம் இருட்டென இணைத்து,
குண்டுப்  பெருச்சாளியாய் பெருக்கிய கொள்ளை,
தொண்டுப் பலனோ தோண்டிய குழியோ?
கெட்டும் கெடுத்தும் கட்டிய கோட்டை,
வெட்டிய குழியினுள் வீழ்ந்திடு மாயின்,
எட்டிய உயரம் கர்ப்பக்ரஹமோ காராக்ரஹமோ?
                                                                 ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment