Tuesday, April 28, 2020

Rejuvenation.

"The world is too much with us"
Said William Wordsworth.
"Little we see in Nature that is ours"
Said he,feeling 'forlorn'.
So right a prophet he was,to say so.
Are we too much for the world now?
Today the whole of mankind,
Faces a heaviness thrust upon it,
Taking away its limbs for a ride.
A tucked in dress might add up beauty.
But tucked in people on a lock down,
Tack,stone age cave links,to their brain.  
As there is no other sensible remedy,
Lock down reigns over ruling heads.
The Sun is scourged not to be seen,
By a huge chunk of humanity.
The earth wails with undistributed weight
Of the living and the dead,locked down.
The Earth's balancing effect stays struck
On its rotating wheels,causing a downtime.
But the ecosystem echoes natural throbs.
The lungs of the atmosphere breathe afresh,
Freed from its human load of daily toxins.
The clouds are shunning distancing concepts,
Collecting densely,not being seared by 
The wings of airlines of abundant hues.
Waters everywhere,are flowing in felicity,
With a feather touch glory of unadulterated
Two hydrogen and one oxygen combo.
Mammals,other than the Homo Sapiens,
Birds,reptiles and amphibians seem to enjoy 
Their ephemeral race,for an uncertain space;
Even man's tomorrow is a doubt of the hour.
When man's fury,fails to rule the elements,
The flames of fire regain their sacred stuff.
Tragedies always carry their cathartic halo,
Behind their ruthless catastrophic gloom.
New wings are born,from the ashes of the phoenix.
P. Chandrasekaran.

Thursday, April 23, 2020

'லாக்டவுன்' {Lock down}

இது  தேதிகளின்,கிழமைகளின், 
'அம்னீஷியா' காலம்;
சின்னத்திரை சீரியல்களின்,
தற்காலிக 'கோமா' கோலம்.
தொலைக்காட்சித் திரைப்படங்களின்
தொற்றுப் பரவலில்,
'இன்சோம்னியா' இணைந்திடும் நேரம்;
'லாக்டவுன்' லாட்டரியில்
உடல்பெருக்கும் 'ஒபேசிட்டி' ஓலம். 
'வீட்டிலிருந்தே  வேலை'கலாச்சாரத்தின்
விஸ்வரூபப்  பிடியில்,
'ஹலூஸினேஷன் ஹார்ரர் ' 
துரத்திடும் தூரம். 
வேலைகள் நிலைக்குமோ,
சேமிப்பு குறையுமோ,
எனும் 'ஆங்ஸைடி நியூரோஸிஸ்' அவலம்!
சர்வதேசச் சந்தையில்
சவப்பெட்டி 'டிரேடிங்கில்',
பேரம்பெருகிடினும்,          
நேற்றுவரை 'டாஸ்மார்க்கில்' 
புதைந்தவர்கள் கூட,
இன்றைக்கு 'பிளாஸ்மாவில்' எழக்கூடும் 
எனும் நம்பிக்கை,நின்று  நிழலாடும்.
'லாக்டவுன்' இன்று 'பீக்கில்' இருந்தாலும் 
விரைவில் வெளிவருவோம் 'வாக்டவுன்' செய்து,
எனும் 'ஆப்டிமிசமே'திரும் .   
ப.சந்திரSekaran

Sunday, April 19, 2020

The Power of Punch

 The grandeur of life is in its crystal gist,
 Like the power of the physique,in its fist.
 Words stamp their weight with a punch.
 But destiny's punch is beyond one's hunch.

 Thoughts wriggle through minds,like a worm,
 Skipping straight moves,pretending to be firm.
 The success of steering through blowing storms,
 Is the verve of the will,against flexibility norms.

 If the body and mind fit into sturdy rings of time,
 Rolling is easier,keeping roles within their prime. 
 Where roles exceed the boundaries of the rings,
 History tumbles down snapping its solid strings.

 Monuments cannot muster their glory on marshes;
 Nor can epics emerge from the lines of empty verses.
 Where the halo glows,the hollows fail to fill the space.
 Like the devil's designs draining before the saint's face .
 P. Chandrasekaran.
  



Thursday, April 16, 2020

இடைவெளி இணைவுகள்

    கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்,நமது 
அன்றைய ஒரே பொழுது போக்கு வானொலிப் பெட்டியே.இந்திய வானொலி நிலையத்தின் இரவு நேர ஒலிபரப்பில்,அவ்வப்போது விளம்பர இடை வேளைகளில்,"இரண்டு குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி வேண்டும்"என்ற குடும்பக் கட்டுப்பாடு விளம்பரம்,இடைவிடாது கேட்டுக் கொண்டே இருக்கும்.
   அன்றைக்கே நம் பாரத பூமி இடைவெளியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தது. இப்போது  ஒரு கொடிய நோயினால் அது 'சமூக இடை வெளி' எனும் அறைகூவலாக மாறியுள்ளது.இது வரை 'கைகொடுக் கும் கை' என்று ஒலித்து,'தோழா தோழா தோளில் கொஞ்சம் சாஞ்சுக் கனும்'என்று பாடி, கட்டிப்பிடித்து பாசத்தை வெளிப்படுத்தி,கட்டிப் பிடித்து உருண்டு போராடி, வலிமையை வென்றெடுத்த பலருக்கும், சமூக இடைவெளி என்பது மிகவும் கசப்பான,மனம் ஏற்றுக்கொள்ளாத புதிய அனுபவமே .
   ஏனெனில்,நாம் இதுவரை இடைவேளை என்ற சொல்லுக்கு மட்டுமே  மிகவும் பரிச்சியம் ஆகியிருக் கிறோம்.திரையரங்குகளில் இடைவேளை,தொலைக் காட்சிகளில் திரைப்படங்களுக்கும் சீரியல்களுக்கு மிடையே,அடிக்கடி விளம்பர இடைவேளைகள்,என் பவை முனைப்புடன் நமது மூளைக்குள் நுழைந்து, இடைவெளியில்லாமல் நமக்கு இடைவேளையைத் தந்து கொண்டிருந்தன. ஆனால், இன்றோ,இடை வேளைக்கு இடங் கொடுக்கும் திரையரங்கங்கள் சமூக இடைவெளியின் தேவை காரணமாக, இடை வேளையின்றி மூடிக்கிடக்கின்றன!  
    திடீரென்று'இடைவெளி'என்ற சொல் இடையே நுழைகையில்,நமக்கு அது கடுக்காயும்,பாகற்காயும், சுண்டைக்காயும்,வேப்பிலையும்,ஒன்றாக அரைத்து வழங்கப்படும்,சற்றே குமட்டும்  மருந்தாகும்.
   நாம் இங்கே என்றைக்கு இடைவெளியை பயன் படுத்தியிருக்கிறோம்?நமக்கு இடைவெளி விட்டு வரிசையில் நின்று பழக்கமில்லை.அது ஆலயமாக இருந்தாலும் ரி,திரையரங்காக இருந்தாலும் ரி, ரேஷன் கடையாக இருந்தாலும் ரி,வரிசை என்பது, முண்டியடிக்கும்,போர்க்களம் போன்ற  அனுபவமே! 
    நம்மில் பலர் என்னறைக்கு இரு சக்கர வாகனங் களை உரிய இடைவெளி விட்டு, சாலைகளில் கடை களுக்கு முன்பாக நிறுத்தியிருக்கிறோம்?அடுத்தவர், சம்பந்தப் பட்ட கடைகளுக்குச் செல்வதற்குக் கூட, நாம் முறையான வழி விடுவதில்லை.சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போதும்,இடைவெளி என்பது நமக்கு இரண்டாம் பட்சமே! எப்படியாவது,நாம் அடுத்த வாகனங்களை முந்திச்செல்ல வேண்டும் என்பதே,எப்போதும் நமது இலக்கு. மற்றவர்களின் தேவைக்கும் அவசரத்திற்கும்,பெரும்பாலோர் உகந்த இடைவெளி கொடுப்பதே  இல்லை. 
   தற்போது,கொரோனா எனும் கொடியநோயின் கிடுக்கிப்பிடியில் உலகமே திண்டாட,உலக சுகாதார நிறுவனமும்,மற்றும் நம்மை ஆளும் அரசுகளும்  கட்டளை பிறப்பிக்க,சமூக இடைவெளியை கடை பிடிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஏனெனில்,என்ன தான்'அச்சம் என்பது மடமையடா' என்று சூளுரைத்தாலும்,'என்னை நோக்கிப் பாயும் தோட்டா'என்ற அச்சமே,அனைவர் மனதிலும் மரணத்தாண்டவம் ஆடிவருகிறது.{கவுதம் மேனன் தலைப்புகளுக்கு நன்றி.} 
   இன்றைய இந்த கட்டாயம்,நம்முடைய கலாச்சாரம் ஆகவேண்டும்.மக்கள்தொகை கட்டுக்கடங்கா நம்மைப் போன்ற நாடுகளுக்கு,ஒருவருக்கொரு வருக்கான சமூக இடைவெளிக்கு இடம் காணுதல், சற்று கடினமே! இருப்பினும் ,நிர்ப்பந்தங்கள் நிலை பெற்ற வழக்கங்களாகும் போது,அதற்கான வழி முறைகளும் காணப்படும்.
   புல்வெளியில்{இன்றைக்கு அவைகள் அரிதாகப் போயினும்}மேயும் ஆடு மாடுகள் கூட,தகுந்த இடை வெளியை பேணுவதை நாம் கண்டிருக்கிறோம். எனவே சமூக இடைவெளி பராமரிப்பு ஒருவருக்கொ ருவர் விருப்பமுடன் பகிர்ந்தளிக்கும்,அவரவர்க்கு உரிய இடமே!சேர்ந்து வாழ்தலின் புரிதலே,ஒருவரின் உரிமையில் இன்னொருவர் குறுக்கிடாதிருத்தலாம்!
    முடிவாக,சமூக இடைவெளி என்பது நாகரீகமான, ஒருவரை மற்றொருவர் மதிக்கும் சமூகத்தின் வெளிப்பாடே! இன்றைய நிர்பந்தங்களை நன்மை களாக்கி,சமூகம் மேம்பச்  செய்வோம்!அதுவே முறையான சமூக இணைவாகும்.    
ப.சந்திரசேகரன் . 

Monday, April 13, 2020

சித்திரை பிறக்கையில்


சித்திரை பிறக்கையில் விலகுமோ சீக்கு? 
நித்திரை தகுமோ நிலம்நிறை இறைவா!    
மனின் பசிக்கு இன்றைக்கு அளவில்லை; 
ம்மன் அருள்வாயோ,அவன்பசி அடக்கி!
உலகம் ஒன்றாகி ஒருநோயில் உருண்டிட, 
புலரும்  பொழுதுகள் புதுவாழ்வுக் கணக்கே! 
குதூகலம் ஒருபோதும் பழங்கதை ஆகுமோ?
பதாகைகள் மானுடப் பண்டிகை படைப்பாம்.

சத்திரமே சொர்க்கமெனும் 
சராசரிச் சமூகம்,  
சித்தரைப்  போலொரு  சித்தாந்தம் தரித்தது. 
விமானச் சிறகுகள் விண்ணைத் துறந்திட,  
வானம்  வெறித்து வண்ணம்  மெலிந்தது. 
இலேசென நினைத்தது,ஈரக்குலை இடித்திட, 
உலாவரும் பொழுதுகள் ஊனமுற நின்றது. 
'இதோவொரு நிவாரணம்'எனுமோர் வழியை உதாரணம் காட்டுமோ சித்திரைத் திருநாள்?  
ப.சந்திரசேகரன் . 

Friday, April 10, 2020

கூட்டுக்குள் சுருண்டு

சூரியனைச் சுற்றியே சுருண்டதோ பூமி? 
காரியங்கள் கசந்திட,கதவடைத்த சாமி! 
ஊரடக்கி தேரறுத்த,உலகழிக்கும் கிருமி; 
பாரில் பரிதவிக்கும்,மனிதகுலம் விம்மி.

பூத்ததும்,காய்தததும்,கனிந்ததும் காய்ந்து, 
சேர்த்ததும் சுருட்டியதும் சுனங்கித் தேய்ந்து,
பார்த்ததும் கேட்டதும்,பயத்தினில் மாய்ந்து
காத்திருக்கும் காலம்,தன்தோளில் சாய்ந்து. 

யாருக்கு நாளையிங்கே,யாரறிவர் போக்கு? பேர்சொல்லி கயிறுழுக்கும் காலன் கணக்கு!
மாரியம்மன் பூச்சொரிதல் மனதினில் தேக்கு; மாறிவிடும் சூழலிலே,மறுவழியை நோக்கு.  

ஆத்திகனும் நாத்திகனும் ஆறறிவை அளந்து,
ஆத்தம் போற்றிடுவர் அவரவர்க்குள் ஆழ்ந்து; பாத்திகட்டும்  பகுத்தறிவும்,பக்திப் பரவசமும், 
கூத்துகள் இரண்டெனினும்,கூட்டுக்குள் ஒன்றே! 

குறிப்பு:-
ஆத்தம்- நட்பு,நெருக்கம்
ப.சந்திரசேகரன் . 

Sunday, April 5, 2020

Global Swings

Now likes and dislikes do not matter.
One has to like what one likes or doesn't.
Success and defeat are corked with a lid.
Love and hatred have become synonyms
With hatred meaning,harbinger of love.
Crowd has been cornered by isolation.
'Money can make many things'is dead.
Money has to save,rather than be saved.

Prince and pauper have come a cropper
With no remedies ever reported proper.
Imported issues do not carry any clues;
But push everyone fast,into their blues.
World's bullies are now put in their place,
While the meek are moving for their space.
Time's clock takes a little rest with nature,
Telling mankind to reschedule its future.
P. Chandrasekaran.