Sunday, January 28, 2018

The Watch Dogs


Who are the wary watch dogs here?
Are those who bark more to buy fear?
Too many voices with too few views.
Shouts are meant to strut their hues.
Scriptures swept by flesh and bones,
Turn vulnerable to bottles and stones.
Standing talks and sedentary smacks,
Set up the stage for warring whacks.

To be a watch dog is to ward off risk
And not to be barking ever,just to frisk.
Bulldozing theories barely bear a fruit;
It is the sniffer dogs that smell their route.
The truest watchdogs are alert all around.
With thought, word and deed well bound.
                 
                                         P.Chandrasekaran.

Saturday, January 27, 2018

சொல் தோழா

வார்த்தைகளுக்கு
ஏன் இப்போது, 
வால் முளைக்கிறது?
திண்ணைப்பேச்சுகள்,
நேரத்தை திண்ணதுண்டு.
இன்றைய திண்ணைகள்,
வலைகளாய்ச் சுருண்டு,
வேர்களில் வெடிக்கின்றன!
சமூக வலைத்தளங்களில்,
சாதிகளும் சாத்திரங்களும்,
சாட்சிகளாய்ப்  பிறன்று,
அன்றாட நிகழ்வுகளாய்,
அறமழித்து ஆள்கின்றன.
சொற்களில் தொக்கிநிற்கும்
சொல்லப்படாத பொருட்கள்,
வாலியின வால்களாய்,
வாயார நீள்கின்றன!
ஒருநாவின் ஒலிகள்,
ஒலிபெருக்கி நாவுகளாய்,
ஓசைகள் எழுப்புகின்றன.
பேசினால் விமர்சனம்!
 'இருந்தாலும்' விமர்சனம்.
துண்டுச் செய்திகளால்,
தோரணமாய் வேட்டிகள்!
வேட்டிகளில் விளம்பரத்தில்,
வெவ்வேறு கறைகள்.
சிண்டுமுடிக்கவும் சீறிப்பாயவும்,
செப்பிடும் வார்த்தைகள்,
மடங்களுக்கும் மேடைகளுக்கும்
மனக்களத்தில் மறுசாயம்பூசி,
மதகுகள் கடப்பாதால்
மானுடம் தழைக்குமோ தோழா! 
                              ப.சந்திரசேகரன் .  

Sunday, January 21, 2018

The Long Wait

When you have not closed your doors
Why should I knock at them?
But I keep waiting at your doorstep
Calling you like a Courier guy,
Holding packages of your potshots.
I withstood your Bruce lee words
Punching my nose with power strokes.
My patience mismatched your part time love.
But as a great line of John Milton goes,
"They also serve who only stand and wait"
Where the ground is strong, the will holds.
After all, broken love grows many folds.
The long wait is never to be a losing game
Akin to the Union and League of Rugby fame.
                                            P. Chandrasekaran.



Monday, January 15, 2018

படியாக் குதிரை

குழந்தைப் பருவத்தின்,
குதூகலம் நினைவில்லை;
இளமையில் நானொன்றும், 
இதிகாசம் காணவில்லை.
வாலிப வருடங்கள்,
நட்பின் சாலையில்,
வசந்த விருட்சமாய்,  
வளங்கொழித்து வழிநெடுக ,
வாஞ்சையுடன் நின்றன.
பத்து பத்து ஆண்டுகளாய், 
படியாக் குதிரைகளாய், 
பாழுங் காலமிங்கே 
பறந்து போனதினால்,  
இந்திய வரைபடமே,
இளைத்துக் குன்றியதாய்,
மருட்சியில்  மனப்பிரமை.
இளைப்பாறும் முதுமையில்,
இழந்ததை நினைத்து
முதுமையை சுமப்பதோ?
இருப்பதைச் சுவைத்து
இனிப்புற வாழ்வதோ?
ஆழ்மனதில் ஆணியடித்து 
ஆணவத்தில்  தொங்கவிட, 
காலமொன்றும் காலண்டரில்லை.
பகல்போன்று பவுர்ணமியாய், 
காரிருள் அமாவாசையாய், 
காலம்தன் கையேட்டை, 
வந்து வந்து வாசிப்பது,
மாற்றத்தின் மறுபதிப்போ?
அன்றின் வாசலைக்கடந்து,
வெறுமுடலாய் வெளியேறி,
ஒளியெனும்  தீப்பிழம்பில்,
இருட்டெனும் புதைகுழியில்,
உருமாறும் உலகியலின்,
ஒருநூலின் முடிவுரையோ?
காலத்தின் முகத்திலென்றும்,
காதோர நரையில்லை;
ஞாலத்தை அறியுமுன்னே,
நானிங்கே நரையுற்றேன்.
காலமெனும் பருந்திற்கு
கால்தூசு இரையானேன். 
                                 ப.சந்திரசேகரன் .  

Thursday, January 11, 2018

பொங்கல் திருநாள்




நன்மை நாடுவோர்க்கு நடத்தையில் நடிப்பில்லை; 

நாவினில் நடமாடும் வாக்கினில் பொய்யில்லை; 
செல்லாக் காசாகிலும் சிரிக்கத் தெரிந்திருப்பின், 
செல்லும் திசையெல்லாம் சந்தோஷச்  சங்கமமே  !

பொல்லாங்கு பிடித்தோரின் பல்லாக்கைத் தூக்காது, 
நல்லோரின் நட்பினை நாள்தோறும் நடப்பாக்கி,
சொல்லிலும் செயலிலும் சற்குணம் போற்றிடின்
நெல்லாகும் நாற்றென, நன்மைபல துளிர்த்திடும். 

கல்லுக்குள் ஈரமென்றும் காலத்தின் கணக்கெனின், 

வெல்லாத தீமையிங்கே, வெளியேறும் நன்னாளில்! 
வில்லின் அம்புகள்போல் வினைக்கொண்டு தாக்காது 
வல்லமையை வாழ்வுறும் அன்பாக்கி,வளம்பெறுவோம் !

எல்லோரும் கைகோர்த்து இனிமையைக் கூட்டுவோம்! 
தொல்லைகளைத் தள்ளிவைத்து திருநாள் காண்போம்! 
                                                                                      ப.சந்திரசேகரன் .