Thursday, November 29, 2018

Ageing Apps.

Get ready ageing guys,
Anytime we may be made,to breathe our last.
But no flag anywhere,will be flown half mast.
Ageing is grooming oneself,for soil and ashes.
Against Alzheimer's and Parkinson's flashes.
Neither forget the past,nor forego the present;
Never ever register any note of daring dissent.
Tomorrow's dreams have all come to a pause;
Every day is a bonanza at the sprint of a toss.
As Time tosses the coin for a head or tail piece
Our life breath goes extinct or gets a new lease .
A Will made in good sense,never means haste;
But a weird Will,is worse than dying intestate. 
Oh,if we'cease upon the midnight with no pain,'
The Will of John Keats,will be valid to sustain.
Our last breath is not a loss or gain for the air,
That builds its boundless breathing everywhere. 
Hence,save files that are a worthy stuff to read;
So that our kith and kin browse them for a lead.
  {Note:- files--memories;read,browse--recall}.
P. Chandrasekaran.

Monday, November 26, 2018

கர்வத்தில் கஜா

வாழமரம் வச்சவன 
வாழவைக்கும் வாழையின, 
வேரோட சாச்சுவுட்டு 
வாழையோட அவனுக்கும், 
வாய்க்கரிசி போட்டாச்சு; 
தென்னமர தோப்புவெச்சு 
தெனாவட்டா இருந்தவன, 
படுக்கப்போட்ட தென்னையோட, 
பாடையில வச்சாச்சு; 
நெல்லுவயல் நெறயவச்சு 
நெஞ்சுநிமித்தி நின்னவன, 
நெல்லோட சேத்துவெச்சு, 
தண்ணிக்குள்ள மூழ்கவைச்சு, 
தெவசம் கொடுத்தாச்சு; 
ஏழைபாழ வீட்டையெல்லாம் 
எடுத்தெறிஞ்சு போட்டபின்ன, 
எல்லாரும் வீதியில, 
விதியத்து கதியத்து 
வயிறெரிஞ்சு நிக்கயில, 
வேட்டிய மடிச்சுக்கட்டி 
வேறுதெச போயாச்சு. 
சேதமெல்லாம் பார்வையிட்டு 
பேதமெல்லாம் பேச்சாகி 
ஊர்முழுக்க கேக்கயில, 
இதுவும் கடக்குமென, 
எல்லாரும் நெனக்கயில 
இன்னொரு பேருவச்சு, 
எங்கவெச்சு வெளுப்பேனோ 
எனக்கே தெரியாது! 
ப.சந்திரசேகரன் .         

Friday, November 23, 2018

பூதாகரப் புயல்

வயலும் வாழ்வும் வறண்டு கிடக்க, 
புயலொன்று பூதமென புகலிடம் புரட்டி,
பயத்தினை பாயென பாடைபோல் விரித்து, 
சாய்த்திடும் மக்களை,சமத்துவக் கூடத்தில்! 
இயக்கம் அனைத்தும் இருளில் மூழ்கிட, 
இயல்பு வாழ்க்கையே நடைபிண மாகும். 
முயற்சியின்  முகவரி முழுவது மழித்து, 
பயிருடன்  தோப்பும் படுகுழி தள்ளி, 
காய்த்திடும் மரங்களை,கால்மிதி ஆக்கிடும்.  
தயங்கித் தயங்கியே துளிர்த்திடும் வேளாண், 
மயங்கி மடிவதே மறுவழி ஆகுமோ! 
இயற்கையின் சீற்றம் ஏழையின் மீதெனில், 
அயரும் அவரது அல்லல் அகற்றுதல்,
செயற்கை ஊற்றாய் செழித்திடும் செல்வமே! 
புயலின் புண்களை வலிகளாய் சுமப்பதே, 
உயர்ந்திடா மனிதரின் துயரத் தொடராம்.
வயிற்றின் பசியை வாடிக்கை யாக்கி,
வியர்வைத் துளிகள் விதைகளாய் ஊன்றிய, 
பயிர்களை எல்லாம் பிரித்து மேய்ந்திடும், 
புயலின்  பேரிடர்,போக்குதல் புலருமோ
 ப.சந்திரசேகரன் .        

Monday, November 19, 2018

சடங்குகள்

     சடங்குகள் வழக்கு முறைகள்;வாழ்க்கை நெறிக
ளன்று.ஜனனம் முதல் மரணம் வரை சடங்குகள் திணிக் கப்படுகின்றன.சடங்குகளைப் புறக்கணித் தால் விளைவுகள் விபரீதமாகுமோ என்று அஞ்சியோ அல்லது சடங்கு நிகழ்வுகளில் இயந்திரத் தன்மை யோடு கலந்துகொண்டோ,நம்மில் பலரும் சடங்கு களைப் பின்பற்றுகிறோம்.
    ஒருவகையில் பார்த்தால் நாம் அனைவரும் சமூக வலையின் சடங்குகளில்,சிக்கிய மீன்களே!பிறந்தால் புண்ணியதானம்;பெண்ணினம் மலர்ந்தால் புண்ணியதானம்;ஆணும் பெண்ணும் மணந்தால் சடங்குகளின் சரவெடி;மறைந்தால் ஆன்மநிறைவு வேண்டி,ஆரோகனச் சடங்குகள்.
   ஆண்டாண்டு காலமாய் நம்மை ஆண்டுவந்த சடங்குகள் இன்றைக்கு இரத்த பந்தங்களின் நேரமும் தூரமும் கருதி,சுருங்கக்கூறி விளங்கவைக்கும் கதைகளாய் மாறிவருகின்றன.அலைபேசிமூலம் உலகில் ஆளுக்கொரு மூலையில் நின்று,தாங்கள் சம்பத்தப்பட்ட,தாங்கள் நிகழ்த்தவேண்டிய சடங்கு களை,தூரம் தகர்த்து  தங்கள் பார்வைக்குள்  கொண்டுவருகின்றனர் புதிய தலைமுறையினர். 
   திருமணச் சடங்குகளின் நேரமும் நிர்ணயமும்  வெகுவாகவே குறைக்கப்பட்டு வருகின்றன.வேதம் ஓதுவோரும் பிசி;கேட்போரும் பிசி.அந்திமச்சடங்கு களின் கதையை எடுத்துக்கொள்வோமெனில், ஒரேநாளில் உடலாகி,தனலின் இறுதிச் சாம்பலாகி, நீரில் சங்கமித்து,ஆன்மா,நீத்தார் நினைவாகிறது.
    அன்பு பாராட்டும் மனிதருக்கு அன்பே சடங்காகும்; கடமை போற்றும் மனிதருக்கு,கடமையே சடங்காகும்.  இணைந்து வாழ்ந்தோரை இறுதிவரை நினைத்து வாழ்வோமெனில்,அதைவிடச்  சடங்கு வேறொன்று மில்லை.
    காலத்தின் தேவையை அனுசரித்து வாழ்க்கையின் சடங்குகள் பழைய வரலாறாக மாறிவரும் வேளை யில்,இறைவழிபாட்டுச் சடங்குமுறைகளில் மட்டும் ஆண் பெண் பாகுபாடும்,சாதிமத பேதமும்,விடாக் கண்டன் கொடாக்கண்டனாக,நம் மென்னியை இறுக்கிப்பிடிப்பது,சடங்குகள் சிக்கவைக்கும் வலைகள் மட்டுமன்று;சில வரைவுகளில் அவைகள் சுருக்குக் கயிறாக மாறி,மனித இனத்தை மூச்சுமுட்டச் செய்யும்,மயானத்திற்கான மாற்றுப்பாதையோ என்று எண்ணத்தூண்டுகிறது.
   புராதன ஆலயங்களின் மகிமை,அங்கே செல்லும் உண்மையான பக்தர்கள்,புண்ணியங்களைப் பகிர்ந்துகொள்வதில்,பெருக்குவதில் இருக்க வேண்டுமே தவிர,அத்திருத்தலங்களை ஆடுபுலி ஆட்டக்களமாக மாற்றுவதில் இல்லை.பலருக்கும் சொந்தமான பிரார்த்தனைக் கூடங்களை சடங்கு களின் பெயரால் ஒருசாரார் தங்களை கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று பறை சாற்றிக்கொள் வதும்,மற்றவர்களை இறைவன் காணத் தயாராக இல்லை என்று முழங்குவதும்,ஏதோ அரசு அதிகாரி யையோ அல்லது அமைச்சரையோ நேரில் கண்டு மனுகொடுக்க முனையும்,பாதிக்கப்பட்டோரின் உரிமையைத் தட்டிப்பறிக்கும்,இடைத்தரகர்களின் செயலுக்குச் சமமானதாகும்.
   இறைவன் கல்லாக இல்லை;ஒளியோடு ஒலியாக, நம்பிக்கையின் ஊற்றாக,வியாபித்திருப்பவன்; நல்ல எண்ணங்களை ஈர்த்து செயலாக்கும் சக்தியா னவன்.மனத்தூய்மையோடும் ஆழ்ந்த பற்றுத லோடும் பரவசத்தோடும் இறைவனை நெருங்கு வோர்க்கு சடங்குகளில் அக்கறையில்லை.மனதில் மணம்பரப்பும் மலருக்கு,அத்தாட்சி அவசியமில்லை. 
   சமத்துவத்தின் சிரசே இறைவன்;சிரசைச் சிதைக் கும் சடங்குகள்,இறைவனைக் கல்லாகக் காணுமே அல்லாது சொல்லாக,செயலாக,சுடர்மிகு ஒளியாகக் காணாது.நல்லோரின் இதயங்களில் நாழிகைத் துடிப்பான இறைவன்,தனது இயக்கத்திற்கு சடங்கு களை சாட்சியாகக் கொள்வதில்லை.மாறாக நல்லெண்ணங்களின்,நற்செயல்களின் சாட்சியே இறைவன்.
ப.சந்திரசேகரன் .      

Saturday, November 17, 2018

Social Goals

In a country of beggars,
Wealth is a vain vagabond,
Shuttling between continents,
And settling down somewhere,
Like cyclones with sinister designs
Shifting their surreptitious reigns.
The smile of wealth is unknown to many,
Whose poverty is patented to the embryo. 
Patronizing is a pastime for the largely rich,
Not pulling notes of nobility from natal nerves.
They never empty their coffers even for a pause.
Their concern for the poor is a piggy back pass.

Philanthropy is a stimulus drawn,not inherited.

The ugly side of wealth understands the need
To build towers of generosity not on its base
But on other's soil swollen with stolen treasures.
Membership drive is to manipulate social goals
As a makeshift mandarin to do topnotch tunes.
Most socialist goals shine with capitalist shades,
Selling slogans through groomed wings of politics.
Unlike cinema,life's display is ever black and white,  
With black surpassing the white,at everybody's spite.
Projects for the poor always make the papers proud
To project the power of wealth through speakers loud.
P. Chandrasekaran.

Wednesday, November 14, 2018

நிறைவே,வரம்

பகுதிநேர வேலையிலும் பற்றுதல் போற்றும்
தகுதியின் வெளிச்சம் தகைமை உடைத்தே!
வெகுமதி ஒன்றே வரையறை யாயின்,
மிகுதியாய்க் காண்பது,மண்டிடும் பொருளே!
இகம்ரும் சுகமே இனியதோர் ஸ்வரமாம்.
மகத்துவ மனைத்தும் மகிழ்ச்சியில் மலர்வதே;
சகித்திடும் சோகம் சிரிப்பினைச் சேர்த்திடின்.
நகச்சுற்றி போலொரு நரகம் அகலுமாம். 

அகத்தின் அழகினைக் கூட்டிடும் அமைதி,

திகைப்பினில் பலரை ஆழ்த்துதல் உறுதி.
நகைத்திடும் நரவலை நடுவழிக் கண்டிட,
பகைத்திடா பார்வை பாதையை மாற்றும்!
முகத்தினில் சலனம் முழுவதும் களைந்து,
சுகத்தினைப் பகிர்ந்து சுடரும் விளக்கென
புகைந்திடும் பனிப்போர் புறவழி போக்கி, 
நிகழ்ந்திடும் அதிசியம் நிறைவின் மாம் 
 ப.சந்திரசேகரன் .  

Sunday, November 11, 2018

Asides of an Indian Politician

'Immunity.com'is my easy e-mail id;
And'corruption'is my password steady.
I expose all scams stinging my rivals    
While defending my own new arrivals.

I swing left and right,of values bereft.
I am secular or communal for a cleft,
Shifting sides,for a share in deals deft.
Slices are easier now,thanks to NEFT.

Prostration perfects my personal passion,
For steering power drives,with precision.
Stoic courage precedes my incarceration;
A phoenix I am,reborn for rejuvenation.

I divide the people to unite the cracks in me
And unite them on a cash for vote guarantee.
As heroes sneer at politics on the big screen,
I do theatrics in the streets,to look Mr.clean.  

P,Chandrasekaran.




                                                                   

Wednesday, November 7, 2018

ஒரு மூஞ்சூறின் காதல்

என்காதல் கண்மணியே, 
எலியினத்துத் தேவதையே
உன் கண்ணில் ஏன் 
கத்திரி வெயில்?
ஏதோ உன் செவிகளில்
செதிர்த் தேங்காய் 
உடைத்தாற்போல!
பெருச்சாளிச் சொற்களால்
தாக்கும் உன் நாவிற்கு
பேய்ப்பிடித்துவிட்டதோ?
காதலைச் சொன்னதற்கு
காட்டேரியாய் எகிருகிறாய்.
செருப்பில்லா உன்கால் கண்டு,
பெருமூச்சு விட்டாலும், 
பதறி எனக்கு பழக்கமில்லை! 
வெள்ளைமனம் கொண்ட நான் 
பிள்ளையார் வாகனம்.
எப்பவும் என்னை நீ, 
தாண்டித் தான் போகனும்! 
முழுமுதலோனைத் தரிசிக்க,
மூஷிகனைத் தொழுதாகனும்!
ப.சந்திரசேகரன் .  

Monday, November 5, 2018

Bypass

                                       
A survival mechanism to comfort the heart;
A speed support system to save time's chart.
A subtle subversion,to gain the higher hand,
To surpass others,on a stouter stage to stand.

A bypass can be an intrusion or intervention
To set right a fault or get the wrong diversion.
The bandwidth of a bypass is a boon or a bane,
Building or breaking bits of faith on a new lane.

Arterial promotion is the objective of a bypass;
Be it veins or roads,it clears the blocking cause.
But in self-promotion,it takes a tricky tacit root,
Tailoring short cut means,for the system to suit.

One way for the other,is a shift in God's itinerary,
Letting man lure a change,as and when necessary. 

P. Chandrasekaran. 







Saturday, November 3, 2018

"எனக்கும்தான்"

சீதையின் சீலமும்,
பாஞ்சாலி சபதமும் 
கண்ணகி சீற்றமும்,
பெண்மை பெரிதுவக்கும் 
பெருந்தவமாய்ப் படர்ந்து 
பூமியைப் பலப்படுத்த 
புறப்பட்டு வந்ததோர்,
இதிகாச இனக்குரலே!

ஆண்மையின் ஆதிக்கம்
ஆங்காங்கே அதிர்ந்தாலும்,
பூங்காற்றாய்ப் புதுத்தேரில்
பவனிவரும் பெண்மையே,
ஓங்கிய உதிரத்தால் 
தேங்கிடும் தடையகற்றி, 
தூங்காமல் நிலம்காக்கும்
மாங்காட்டுத் தெய்வமாம்!

இதிகாசம் சிலநேரம், 
பெண்மையைப் பழிப்பதுபோல் 
ஆண்மையின் ஆரோகணம் 
மாண்பிறக்கிக் காட்டிடுமாம்! 
வன்கொடுமைச் செயலனைத்தும் 
வரலாற்றுப் பிழையாகி, 
பண்பாடு மேலோங்க, 
பழங்கதைகள் ஆகிடுமே! 

பழங்கதையின் வக்கிரங்கள் 
பெண்ணீய வடுக்களாய் 
பதிவுகள் புடைசூழ 
"எனக்கும்தான்"எனமுழங்கி  
மாதர்தம் மனஅழுத்தம்  
மல்யுத்தக் களம்காண, 
ஆண்குரலின் ஆணவத்தின் 
அருவருப்பு முகப்போடு, 
வீண்பழியும்  இலக்காக, 
விடுகதைகள் விற்பனைக்கோ? 
ப.சந்திரசேகரன் .