Tuesday, August 8, 2017

சொல் தோழா!

சொல் தோழா!
துடைப்பான்கள் கொண்டுவா தோழா.
மூட்டை மூட்டையாய் குறுக்கு வழியில்
கொள்ளை அடித்த குபேரர்களின்,
செல்வக் குப்பைகளை கூட்டிப்பெருக்க
உனக்கும் எனக்கும் ஆயுள் போதாது
இங்கே மனித நேயமே மாசுபட்டுக் கிடக்கிறது
ஆலயங்களில் கூட,
போலிப் பிரார்த்தனைகளின் நச்சுக்காற்றால்
மூலப் பிரகாரமே மூச்சுமுட்டிக் கிடக்கிறது.
அங்கே உள்ளே சென்று சுத்தம் செய்ய,
உனக்கும் எனக்கும் உரிமை இல்லை.
ஆனால் உள்ளே இருக்கும் பலருக்கோ,
உள்ளத்தில் சுத்தமின்றி உள்ளிருக்க தகுதியில்லை

 சுத்தமான இந்தியா என்று சூளுரைத்து,
மொத்தமாய் நாடாள முனைவோரின்,
முறையற்ற பேரங்களால், 

சத்தமின்றி இறைவன் பாரதம் துறப்பானோ?,
சொல் தோழா!

                                        ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment