Wednesday, December 27, 2017

அன்பு

அரசியல் பேசுகிறேன்!
அன்பை நாகரீகமாக்கி. 
ஆலயம் செல்கிறேன்!
ஆரிய திராவிட நிலைகளைக் கடந்து.
ஆண்டவனைத் தொழுகிறேன் !
ஆசாரங்களைத் துறந்து.

அனைத்து மதங்களையும் தாண்டி,
ஆன்மீகத்தில் ஆழாது,
அன்பினில் நிலைகொள்ளும்போது,
ஆண்டவனே ஆர்ப்பரிக்கக்கூடும்.
அன்புடன் வம்பு பேசுகையில்,
வம்பு வந்த வழி மறந்துபோகும்.

பொய்யான அன்பு,
புரியாத உறவுகளாய்,
போலியான நட்பாய்,
கால ஓட்டத்தில் காலாவதியாகும்.

பிறர்க்குமட்டுமே உரிய,
அடைக்கும் தாழில்லா அன்பே,
சரித்திரம் போற்றும் சமூகமாகும்.
                                        ப.சந்திரசேகரன்.

3 comments:

  1. It is prosaic. Instead of making naive statements try to use images to strike your thoughts.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete