Thursday, May 31, 2018

நான் யார்? நீ யார்?

"நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார் யார்?"
போராடியது யார்?
போராடச் சொன்னது யார்?
சுட்டது யார்?
சுடச் சொன்னது யார்?
செத்தவர் யார்? 
புதைத்தவர் யார்? 
எரித்தவர் யார்? 
கமல் யார்? பெரியார்?
ரஜினி யார்? எம் ஜி ஆர்?
நல்லவர் யார்? 
கெட்டவர் யார்?
சுடுகாட்டு வழி
அமைத்தவர் யார்?
பாபிகள் யார்?
சுமப்பவர் யார்?
அரசியலில் யார்?
ஆன்மீகத்தில் யார்?
இரண்டிலும் யார்?
ஊரைக் கொள்ளையடித்து
உலையில் போட்டவர் யார்?
போராடி  போராடி
உருக்குலைந்தது யார்?
கருப்பு வெள்ளையாய்
கரன்சி பார்ப்பவர் யார்?
கரன்சி இன்றியே
கருத்துப்போனவர் யார்?
மாயையில் மயங்கிடும்
தமிழனின்  உணர்வை
தட்டி எழுப்புவது யார் ?
                           ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment