Tuesday, May 8, 2018

தாகத்திற்கும் யோகமில்லை

காவிரி நீர் 
காலம் காலமாய் 
கானல் நீரே! 
கடல் நீரை 
கடன் கேட்டால், 
கடல் அலைகள் 
பின் வாங்குகின்றன. 
நில நீரோ, 
பலதூரம் 
பாதாளம் படர்ந்தது  .
மேகத்துக்கு தூதுவிட்டால், 
வானம் 
வாய்தா கேட்கிறது. 
தாகத்திற்கு நீர்கேட்டு 
யாகமே நடத்தினாலும், 
சோகம் 
சொடக்கு போடுகிறது .
தமிழ் மண்ணில் ,
தாகத்திற்கும் யோகமில்லை! 
                              ப.சந்திரசேகரன் .  

1 comment:

  1. vow...
    tamil mannil thagathirkum yogamillai...
    pazhi pavathirkum panchamillai

    ReplyDelete