கைய்யோடும் மார்போடும் இறுக்கிப் பிடிச்சுகிட்டு,
பொய்யில்லா பேச்சோட பொத்திவெச்ச மரப்பாச்சி.
பகலோடும் இரவோடும் பகிந்துகிட்ட கதையெல்லாம்,
அகலாத நெனவாச்சு அதுவே என்மனசாட்சி .
என்னாதான் அலைபேசி இன்னைக்கு இருந்தாலும்,
மரப்பாச்சி இருக்கிறப்போ உசிருக்குள்ளே உறவாச்சு.
தொலைதூர பேச்சுக்கு அலைபேசி இருந்தாலும்,
நெலையான பேச்சுக்கு மரப்பாச்சி இருந்துச்சுனா,
மலபோல சோகமெல்லாம் மளமளன்னு கொறஞ்சுபோகும்.
என்னவெல்லாம் எழந்துட்டோம்னு எண்ணிப் பாக்கையில,
முன்னால முழுநிலவா மொளச்சுவரும் மரப்பாச்சி.
கண்ணுக்குத் தெரியாத அலைபேசி பேச்செல்லாம்,
தண்ணியில எழுதின, தவறிப்போகும் எழுத்துபோல;
மண்ணுக்குள்ள வேர்செழிச்ச பொன்வயலே மரப்பாச்சி.
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment