Saturday, May 5, 2018

அரசியல் பறவை

அரசியல் பறவைக்கு 
அதிவேகம் தருவது, 
ஆடிக் காற்றென 
ஆவேசம் கொண்டு, 
கூட்டினைக் கடக்கும், 
ஊழல் சிறகுகளே! 

ஊர்க்குருவிகள்
உயரப் பறந்து,
குடி பெயர்ந்து 
கோடிகள் திரட்டி,
குலம் செழித்தி
வலம் வருதலே, 
கொடிச்  சிறகாம்.

உண்டியல் குலுக்கி 
துண்டு விரித்து, 
தொண்டு புரிந்தி 
துவளாமல் யாசித்து, 
தன்னலத் தூசியை 
தூய்மைத் துண்டால் 
தூரத்தில் வீசிது
தொன்மை அரசியல். 

துண்டுகள் மாற்றி 
இண்டு இடுக்கெலாம் 
சுயநலம் சூடேற்றி, 
முண்டிப் பறக்குது
இன்றைய அரசியல். 

குண்டுக் கட்டாய் 
தூக்கி எறிந்தாலும், 
மீண்டும் எகிறுமே, 
அண்டம் அளந்திடும் 
ஆசையில் சிறகடிக்கும், 
அரசியல் பறவை. 
                      ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment