Sunday, May 6, 2018

'நீட்'டிடம் மாட்டி

"என் கல்விக் கனவை
கற்பனைக் கதையாக நீ எழுத,
துணையோடு வந்த நான்
தனியாகத் திரும்புகிறேன்!
அவையத்து முந்தியிருக்கச் செய்த
என்துணை இயற்கை எய்தியதை,
அறியாமலேயே எங்கோ ஒரு மூலையில்,
என் கனவை நான் கலைத்தேன். 
நினைவு திரும்புகையில்,
என்னோடு துணையாக வந்த
என் தந்தை நினைவானார்.
'நீட்' எனும் தேர்வால்
மருத்துவம் கிடைக்கலாம்;
மாண்டுபோன தந்தை
மீண்டு வருவாரோ? 
ஒன்றை இழந்து 
ஒன்றை பெறுவேனோ? 
இரண்டையும் இழந்து 
இருட்டில் அடைவேனோ? 
'நீட்' என்ற உன்னிடம், 
மாட்டித் தவிப்பது 
நான் மட்டுமல்லவே." 
                    {மாணவரின் மனதோடு }  
                         ப.சந்திரசேகரன் .  

1 comment:

  1. 'unmai....murtilum unmai...mukkalum unmai....' neetidam matti thavippathu nann mattumallave...en kudumbamumthaan..enpathu than'unmai....murtilum unmai...mukkalum unmai....'

    ReplyDelete