Thursday, May 17, 2018

எண்ணங்களுக்கு வால்முளைக்க,

மனதிற்குள் பல மரங்கள்!
எண்ணங்களுக்கு வால்முளைக்க,
எதிர்மறைத் தாவல்களால் 
கிளைகளின் கிளர்ச்சியில்,
தளிறுகள் தடம் புரளுகின்றன.
மதியினை சூது கவ்வுமோ,
சூதினை மதி கவ்வுமோ,
கருணைக் கரங்கள் 
சொர்க்க வாசலை 
தட்டிடும் வேளையில், 
பாபத்தின் கால்கள் 
சாபச் சுவடுகளின்றி, 
நான்மாட வீதிவழி 
நரகத்தைச் சுற்றிவந்து, 
சொர்க்கம் சுவைக்கின்றன.
ஆலய தரிசனத்தில், 
ஒளியும் உண்டியலும்,
விழியிடைக் காட்டும்  
ஒருநூல் இடைவெளியில்,
சொர்க்கமும் நரகமும்
இடம் பெயருகின்றன.
சிலைகள் கடவுளோ, 
லையேறிய கல்லோ !
ரங்களும் கால்களும் 
வாயில்வழி வெளியேற, 
பாபிகளின் சொர்க்கத்தில்,
சாபங்கள்  என்றும் 
பூபாளம் இசைக்கின்றன
புண்ணியத்தின் கரங்கள் 
சொர்க்க வாசலை 
தட்டித் தளர்ந்து,
தலை சாய்கின்றன.
            ப.சந்திரசேகரன் .

No comments:

Post a Comment