Thursday, July 28, 2016

சொல் தோழா! . 11

சொல் தோழா!
நாம் தேடுவதிங்கே கிடைக்காது போமோ?
ஓமெனும்  மந்திரம் அல்லவே,நம்மிலக்கு
தாமெனும் தாக்கம் தம்முள் கொண்டவர்
ஊமையின் மொழியினில் ஒலிகள் இழப்பர்.
பூமியில் புதுப்புது புருவங்கள் உயர்ந்திட,
நாமெனும் சொல்லின் நாதம் பெருக்குவோம்.
சாமியைத் தொழுது, சாத்திரம் காணலும்,
தீமிதி கடந்து, தூய்மைகள் உணர்த்தலும்,
கோமியம் தெளித்து கொடுந்தீட் டகற்றலும்,
சேமித்த மரபின் சிறுபயிர்க ளாயிடினும்,
பூமியும் சாமியும் ஒன்றெனக் காணலே,
நாமெனும் நாற்றின் நெடுவய லென்னும்,
பாமரன் போற்றும் பொதுவழிச் செல்வோம்.

                                                    பசந்திரசேகரன்.
   

No comments:

Post a Comment