Tuesday, July 12, 2016

மாயா . 2

மாயா .
புழுக்கம் நெஞ்சிலும், புழுதி புறத்திலும்,
இழப்புகள் தாங்கி இதயம் நொறுங்கிட,
வழக்குகள் தொடுத்திட, எதிரணி யாரோ ?
வீழ்த்திடும் விதியதன் தொடர்பெண் ஏதோ?
உள்குத்தே வேரூன்றி உறவுகள் ஊனமுற,
முள்ஏதோ மலர்ஏதோ! தள்ளவோ தொடவோ!
கிள்ளி எறிந்தாலும் கிளர்ச்சிகள் பலகோடி
துள்ளித் துரத்திடுமே மனதிற்குள் மாயையாய்  .  
                                                              ப. சந்திரசேகரன் .    

No comments:

Post a Comment