Saturday, July 23, 2016

மாயா. 4

மாயா.
வாழ்வெனும் வலையில் வல்லினம் எதுவோ?
தாழும் உயிரினம் தரமற்ற தாகுமோ?
பாழும் பசியிலும் பற்றிடும்  வெறியிலும்,
வேழமாய், எறும்பும், வரிசையில் வலம் வர,
ஆழம் தொட்ட ஆலமாய் அறிவியல்,
சூழும் போட்டியில் சூரைக் காற்றென,    
நாடக மேடையை நாடு கடத்தி,
வேடம் தரித்த வெள்ளித் திரையின்,  
கூடுகள் கலைத்தது கொடுந் தொலைக்காட்சி.
வீடுகள் அரங்காய் இணைய வலைக்குள்
தேடுதல் வேட்டையில் திரைப்படம் திருடிட,
மூடுதல் முட்டிய  அரங்குகள் பலவாம்.
ஒன்றை ஒன்று விழுங்கிடும் வலையில்
வென்று நிலைப்பது மனமோ மாயையோ?
                                        பசந்திரசேகரன்.  


   

No comments:

Post a Comment