Saturday, February 17, 2018

கைகள்





இளமையாய் இருக்'கை'யில்,
காதலை நினைக்'கை'யில்,
இறக்'கை' கட்டி பறக்'கை'யில்,
இனியவளின் 'கை' பிடித்து 
இல்லறத்தில் இணை'கை'யில் 
நம்பிக்'கை' ஊற்றாகி,
நன்மக்கள் பிறக்'கை'யில்,
மனம் உவ'கை' அடைந்திட,
பிள்ளைகள் படிக்'கை'யில், 
பட்டமென உயர்'கை'யில்,
செல்வாக்'கை' உயர்த்திடும் 
பெருமையில் திளைக்'கை'யில்,
நன்றியுடன் 'கை'கூப்பி
இறைவனைத் தொழு'கை'யில்
இலக்'கை'முடித்து,
காலனின் கணக் 'கை' 
படுக்'கை'யில் கடத்தாது , 
வாயிலைக் கடக்'கை'யில்
மனைவி மனம் வலிக்'கை'யில்,
மக்கள்  னம் தவிக்'கை'யில்,
நண்பர் மனம் கனக்'கை'யில்,
ஊர் சுற்றி  அழு'கை'யில்
மயானத்தை அடை'கை'யில்
வாங்கி வந்த வரமெல்லாம்
வசந்தமாய் நிறை'கை'யில்,
மண்ணாய் சாம்பலாய்
பூதவுடல் முடி'கை'யில்,
நிற்கை'யில்   நடக்'கை'யில்,
நிலம்சார்ந்து கிடக் 'கை'யில்  .
இறுதியில் இவ்வுடலை
பல'கை'கள் சுமக்'கை'யில்,
உல'கை'யே உருவாக்கும் கைகளே,
ஊன்றுகோல் ஆகிடும் கைகளாம் !
                                ப.சந்திரசேகரன் .  





7 comments: