Thursday, February 1, 2018

மாயா !






பாதியில் நிற்பது ஆதியின் குழப்பமெனின்
பாதையைக் குறைகூறல் பாசாங்குக் கதையே!
மீதியைக் காண்பதே  மீள்வதன் படிவமாம்;
மோதலின் முடிவுகள் முடிவிலா மாயையே !
மதில்மேல் பூனைக்கு மதிலென்ன தடையோ?
விதியைத் தூற்றிட வெற்றிடம் நிரம்புமோ?

நாரதர் இன்றியே நாளுக்கோர் கலகமிங்கே; 
ஊருக்கே உலையாக உருமாறும் கலவரங்கள்.
நேர்வழிப் பாதையை நடுவினில்  அடைத்திட,
சேரும் பாதைகளில்  சந்தைபோல் நெரிசல்ள்.
பரமபதப் பாதையிலே படிப்படியாச் செல்வதோ ?
பரிவாரம் படைகொண்டு போராடித் தோற்பதோ? 
விரிந்ததோர் நெடுஞ்சாலை வழிமுட்டி நின்றி
சரியான சந்துகளும் சக்கரத்தின் வியூகமே . 

எதுக்கெது சரியென்னும் புதுப்புது குழப்பத்தால், 
பதைத்திடும் மனம்கூட பயணத்தின் தடையே ;
நதியின் பாதைக்கு நாளுமதன் வேகமெனின், 
பதித்திடும் பாதத்தின்,வழித்தோழன் வித்தகமே.  
பூதமெனும் போலிகளால் பெருமூச்சு வாங்காது, 
பாதையின் தடையகற்றும் பாசுரம், மனபலமே. 
                                                                    ப.சந்திரசேகரன் .  

2 comments:

  1. A good one.Your last poem that you sent me is a good poem that has propaganda value.

    ReplyDelete
  2. Thank you SRM for your your response to my poem.

    ReplyDelete