Thursday, February 9, 2017

சொல் தோழா!

சொல் தோழா! 
"இன்றய உணவு என்ன? எங்கே ?எப்போது? 
உண்டா இல்லையா? இறைவனே அறிவான்" 
சொல்கிறது இஸ்லாம் .
உணவே இவ்வாறெனின்,உடமைகள் 
உறைவிடம் ஊர்திகள் உன்னுடையவோ?
உன்னுடையதே உறுதியில்லை என்றாகிட
உன்னுடையதல்லாதது உன்னுடையதாகுமோ?
ஊர்க்குருவி பருந்தாகுமோ?
உன்பெயரை அடைமொழிகள் அபகரிக்க
உன்பெயரே உன்னுடையதில்லையே !
உன்பெயரே உனக்கில்லை
பின் எப்படி,, உன் பிரதிநிதிகள் யார்,
அவர்கள் இன்று எங்கே
சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்,
என்று உன்னால் சொல்லமுடியும் ?
"ஊர்பற்றி எரிகையில் ஆளுனருக்கு
இதர சொந்த காரியங்கள் முக்கியமோ"
என்று கேட்கிறாயே ஆனால்
உன் பிரதிநிதிகளே உல்லாச ஊர்திகளில்
உவகைக் கூடங்களில் திரைமறைவாகிப் போனார்களே!
"நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்"
கெட்டது நிலை மட்டுமா நீதியும் நேர்மையும் நாணயமுமே
 உறக்கமில்லை தோழா மனஉளைச்சலில் . .

                                                ப. சந்திரசேகரன் .

No comments:

Post a Comment