Sunday, February 5, 2017

சொல் தோழா!

சொல் தோழா!
வேதனையின்  வேரெங்கே ?
விதையோடு மண்ணில் விழுந்திடுமோ?
முளைக்கியிலே வேரோடு இணைந்திடுமோ?
செடியாக அதன் கிளையாக மாறிடுமோ?
கனகாம்பரமும் கள்ளிச்செடியும்
அடுத்தடுத்தே வளர
கள்ளிச்செடி கனகாம்பரம் ஆகிடுமோ?
வேதனை முள்ளாகக் குத்திட
விதைத்தது காரணமோ,விளைந்ததே வேதனையோ?
சொல் தோழா சொல்.
                           ப. சந்திரசேகரன்  

No comments:

Post a Comment