Thursday, August 25, 2016

சொல் தோழா !

சொல் தோழா !
நம்பிக்கை என்பது ஒருவழிப் பாதையோ
அன்பைப் பகிர்வதும் அன்னம் பகிர்தலும்    
இன்பம் கூடுகையில் இனைந்து மகிழ்வதும்
துன்பப் படுகையில் தோள்கள் தேடுவதும்
நம்பிக்கை எனும் இருவழிப் பாதையே
ஒருமுனை நம்பிட  மறுமுனை கைவிட
தெருவினில் தேம்புமோ தவித்திடும் நம்பிக்கை .
நம்பிக்கை மீறலும், நான்கு வேதங்களின்
கம்பிகள் கடந்து காயங்கள் படைத்தலே.
கெடுவரோ நம்பினோர் கெடுதலால் என்றும்,
நெடுமரம் போன்று நம்பிக்கை வளர்த்து
நடுவராய் நிற்பது நெஞ்சின் இறைமையே .
                                    ப. சந்திரசேகரன் .        
     
   

No comments:

Post a Comment