Wednesday, August 3, 2016

சொல் தோழா !-- 12

சொல் தோழா !
பழமொழி என்பது புதுயுக மரத்தின்
அழிந்த பழமென விழுந்திடக் கூடுமோ ?
மொழிந்த கூற்றுகள் மொழியின் ஊற்றோ
எழுந்த கருத்தின் இறையொளி வீச்சோ?
குழந்தையின் சிரிப்பினில் குற்றம் காணலும்,
பழமொழிச் சொற்களில் பரிகாசம் போற்றலும்,
இழந்திடக் கூடா இயக்க விசையினை,
இழுத்து நிறுத்தும் இறுக்க மன்றோ !
                              ப. சந்திரசேகரன் .    


No comments:

Post a Comment