Wednesday, August 17, 2016

மாயா! .

மாயா! .
ஒன்றைப் பெறுகையில் மற்றொன்று மடியுமோ?
அன்றைய நதியும் அழகுற்ற எரியும் 
இன்றய நகரங்களின் ஏட்டினில் மட்டுமே .
குன்றிய நதிகளும் குறுகிய ஏரிகளும் 
நன்றாய்க் கொழுத்த நாகரீகப் பெருக்கத்தின், 
தின்றது போகத் திகட்டிய மிச்சமே.
கொன்றதன் பாவம் தின்றிடப் போகுமெனும்,
சான்றிலாக் கூற்றில் சாகுமோ இயற்கையும் .
தென்றலைத் தாண்டி புயலொன்று பாய்ந்திட, 
வென்றிடும் இயற்கையே வினையின் பலனாம்.
நின்று கொல்லுமோ நெரித்து கொல்லுமோ, 
ஒன்றைப் பெற்றதனால் , டியுமே மற்றொன்று . 
                                         ப.சந்திரசேகரன்.       

No comments:

Post a Comment