Thursday, March 7, 2019

இன்றைய கீதை

1}எது நடக்கவில்லையோ அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை.
2}நீ என்ன  விட்டுத் தந்தாய்,இங்கே விட்டுச் செல்ல. 
3}எது திருடப்பட்டதோ,அது உன்னிடமிருந்தே    திருடப்பட்டது.
4} நான் மைய்யத்திலும் இருப்பேன்;வையம் முழுமையும் சுற்றுவேன்;என்னைச் சுற்றுதெல்லாம் என்கை அசைவே.
5}கடமையைச் செய்யாதே;காலம் முழுக்க பலன் அடைவாய்.
6}வெறுங் கையோடு வந்தாய்;நீ அள்ளிய குருணைக்கு அளவே இல்லை.
7}உன் ஆன்மா அழிவதில்லை;ஏனெனில் உனக்கு ஆன்மாவே இல்லை. 
8}இன்று உன்னுடையதாக இருப்பது நேற்று பிறருடையது;அது இன்னும் பலரது  உடமையைச் சேர்த்து,நாளை உன்னுடையதாகும். 
9}நரகத்தின் வாயில்கள் மூன்று:- அவை முறையே,காமம்,குரோதம்,பேராசை;இவை மூன்றும் உனது வாயில்களே! 
10}மாற்றமே அகிலத்தின் விதி;பரம ஏழையாகிய நீ பத்து எண்ணுவதற்குள் கோடீஸ்வரன். 
 ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment