Tuesday, March 7, 2017

வெளியில்வா.

வெளியில்வா இங்கே வீதிகளுக்கு வரம்பில்லை.
ஒளியில்லாப் பகல்போல உறவாடி என்னப்பயன்? 
நெளிவு சுளிவுகளை நீயே கற்றுக்கொள்.
உளியில்லாச் சிற்பங்கள் உலகிலுண்டோ சொல்? 
துளிர்ப்பதற்கு நீரென்றும் தேவைபோல் நமக்கு, 
வெளிச்சம் நாடுதலே வாழ்வதற்கு வரைவுகோல்.
கிளைகள் பெருகுதலே மரங்களின் மாட்சி.
தெளிவுடன் பரவிடு நடுமரமே நம்பிக்கை.

வெளியில்வா! ஒளியோடு பகலில் பரவிடு .
                                           ப. சந்திரசேகரன்.           

No comments:

Post a Comment