Tuesday, March 14, 2017

மாயா!

மாயா!
சமரசம் உலாவும் சமாதிகள்
தியான மேடைகளாய்
சத்திய  அரங்கேற்றத்தின்
சதுரங்கக் களங்களாய் மாறிட,
உதிரம் உறைந்து உறங்கும் உயிர்கள்
கதிரினில் கரையும் பனியென உருகி,
சதையும் எலும்பும் சட்டெனக் கரைந்து,
புதிரெனும் ஆன்மா புதையிருள் கடக்குமோ
விதைகளாய் மாறி விருட்சம் பெறுமோ
பதில்சொல் மாயா பகுத்தறிவோடு.  
                                             ப. சந்திரசேகரன்.                 

No comments:

Post a Comment