Friday, September 4, 2026

வழிகாட்டி



ஒளிக்கு  வழிகாட்டி,

வழிக்கு ஒளி காட்டி;

வாத்தியார் என்று 

செல்லமாய் அழைக்கும், 

நல்லுயிர், ஆசிரியன். 

உச்சிமுதல் பாதம்வரை, 

கச்சிதமாய் கவர்ந்திழுத்து, 

மெச்சிடும் கல்விதனை 

மெருகூட்டி முறையாக்கி,

தரமோடு  தகுதியினை

தரணியில் வலம்வர

தருவிக்கும் ஆசிரியரை,

அறமோடு வாழ்த்துதற்கு,

நாளொன்று போதாதே!

நாளெல்லாம் வாழ்த்திடுவோம்,

நீள்புவி நிறைந்திடவே!

ப.சந்திரசேகரன்.

 


No comments:

Post a Comment