Wednesday, April 26, 2023

தொழிலும் தெய்வமும்

(உழைப்போர் உயரட்டும்.)

≈=====≈======≈======≈=====≈

செய்யும் தொழிலே தெய்வம் என்றால்,

தொழுதிடும் தெய்வம் தொழிலென் றாகுமோ?

பெய்திடும் மழையே பெரிதொரு தொழிலாய்,

பூமியில் பசுமைப் புரட்சிகள் விதைக்கும்.

கொய்திடும் நிலத்தில் கூறுகள் அமைத்து,

கூடுதல் பசுமை,படைப்பதே தொழிலாம்.

'மெய்வருத்தக் கூலி'முயற்சிகள் தருமோ?

மேதினப் புகழ்ச்சி போக்குமோ அயர்ச்சி?


உழைக்கும் நேரம் உருப்படி ஆக்கலும்,

உருப்படி உழைப்பு,ஊதியம் பெறுதலும்,

வழக்குகள் இல்லா வரையறை கணக்கில்,

நெருப்பினில் நீரை இறைப்பது போலாம்.

விழித்திரை காணும் வெளிப்படை விதிகள்,

பெருக்குமே உழைப்பு,ஆற்றல் போற்றலில்.

ப.சந்திரசேகரன். 

3 comments:

  1. சிறப்பு... சார்... உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.மணிகண்டன்.

      Delete