Monday, November 7, 2022

மைய்யும் மெய்யும்

வெண்மையைத் தேடுதல் நன்மையைக் கூறுமோ?

நன்மையைத் நாடுதல் வெண்மையை வகுக்குமோ?

கண்மைய் இட்டபின் கலங்குவோர் பலருண்டு;

உண்மையில் கண்மைய்யில் களங்கம் இல்லை.


ஆண்மையும் பெண்மையும் அழகினில் மயங்கிட,

தொண்மை அழகோ தொடுந்தூரம் அழகோ?

அண்மையில் காணுதல் உண்மையைக் கூறுமோ?.

திண்மையைத் திரட்டுதல் திறமையை கூட்டுமோ?


விண்ணைத் தொடுதலில் வீம்புகள் விரிந்திட,

மண்ணியல் மாண்புகள் மாந்தர்தம் பாதையில்,

புண்ணியப் பூக்களாய் புண்படு முட்களாய்

விண்ணையும்,மண்ணையும்,விடைகளில் பூட்டும்.


எண்ணியபடி எத்தனம் ஏணிப்படி ஏறியே,

தன்னிலை தரித்துநல் தகுதிகள் பெருக்கும்.

ப.சந்திரசேகரன்.





2 comments: