Thursday, November 10, 2022

பத்தாது பத்தாது.

பணத்தாசைக்கு

கல்லா பெட்டிகள்.

ஒத்தாசைக்கு,

அல்லக் கைகள்.

அரசாசையில்

கருப்பாடுகள்.

நப்பாசையில்

நாற்காலிகள்.


பத்தாது எனச்சொல்லி

பித்தாகும்  பகடையிலே

பணத்தால் பதவிகண்டு

பதவியால் பணம்காண்பர்.

தேசியக்கதை பேசும் 

நேசமற்ற அரசியலில்

பூசுவர் பொய்ச்சுவர்கள்,

மெய்யெனும் கலவைகொண்டு.

ஊசிக்குள் நூல்நுழையும்

ஊடகக் கதையெல்லாம்,

பாசிச பெருந்தொற்றை,

பக்குவமாய்ப் பரிமாறும்.

ஈரைப் பேனாக்கி

பெருச்சாளி பேன்விழுங்க,

பெருத்துவரும் பெரும்படைகள்

பறிக்குமாம் வேரோடு

அறம்போற்றும் அரசுமுறை.

பத்தாது பத்தாது

பசிக்குணவு பத்தாது.

கத்தாழை காட்டிற்குள்

எத்தழையும் தழைக்காது.


ப.சந்திர சேகரன்.





 



No comments:

Post a Comment