Wednesday, August 3, 2022

வர்ண நஞ்சு

'மனிதரில் இத்தனை நிறங்களா',

இது ஒரு திரைப்படத் தலைப்பு.

ஒருவர்ண ரத்தம்,பலப்பல பிரிவா,

என்ற நினைப்பே,இருளின் மலைப்பு.

இந்தியக் கொடியின் வர்ணங்கள் மூன்று;

பிரிவினில் ஒற்றுமை என்பதன் சான்று.


வானத்து வில்லின் வர்ணங்கள் ஏழு;

பானைச் சோற்றின் பதமென வாழு.

சாதியின் வர்ணம் நான்கெனும் கூற்று

வீதியில் தூக்கி வீசுவோர் போற்று.


ஆதி தோற்றம்,ஒன்றெனும் தாயத்தில்,

பாதியில் நுழைந்தோர் பகடை ஆடினர்.

வண்ணத்து பூச்சி இறக்கைகள் பறித்து

எண்ண நூலால் இழைகள் பிரித்தனர்.

வேதமும் வாதமும் மோதிடும் வேளையில்,

வர்ண நஞ்சினை வீழ்த்திடும் மானுடம்!

ப.சந்திரசேகரன்.







2 comments:

  1. சிறப்பு சார்....... மானுடம் வெல்லும்.

    ReplyDelete
  2. Glad at the conclding Positive words🙏

    ReplyDelete