Friday, July 29, 2022

எதிரும் புதிரும்

எலிகளின் பொந்துகளில் 

பாம்பிற்கு இடமில்லை; 

பாம்புகள் படையெடுக்க,  

எள்ளுக்கு எலிகளில்லை 

 

உழக்கு  அரிசிக்கு  

உலக்கை தேவையில்லை; 

உலக்கையின்  இடியில் 

குருணையில் அரிசியில்லை. 


படியளக்கும் மன்னனுக்கு 

பரதேசம் தேவையில்லை; 

பரதேசி நினைத்தாலும் 

படியளக்க வாய்ப்பில்லை.


விடியலுக்கு காத்திருப்போர் 

பகலவனை பகைப்பதில்லை; 

பகலவனின் பகைதனிலே 

பசும்புற்கள் நிற்பதில்லை.  


அகல்விளக்கின் ஒளியினிலே, 

அந்தியிருள் புகுவதில்லை;

அந்தியிருள் ஆட்டத்திற்கு  

ஆதவனின் மேடையில்லை.


அல்லலின்றி ஆக்கமில்லை; 

ஆக்கம்பெறின் அல்லலில்லை.

கல்லுமட்டும் கடவுளில்லை;

கடவுளொன்றும் கல்லுமில்லை.         

ப.சந்திரசேகரன். 

2 comments:

  1. இன்றுவரை அதுபற்றி யோசிக்கவே இல்லை சகோ.

    ReplyDelete