Thursday, December 5, 2019

வெங்காயம்

பொய்யான காயத்தில் ,
மெய்யன மணக்கும், 
பழைய சோற்றின் 
புதிய அத்தியாயம். 
பெரியாரின் செல்லப்பிள்ளை; 
புரியாதோர் பிதற்றிட 
பிடித்திடும் தொல்லை .
உரித்தால் உருவத்தில் 
ஒன்றும் இல்லை ;
சுவைத்தால் சமையலில் 
சொர்க்கத்தின் எல்லை.
காயப் படுத்தினால் 
கண்ணில் நீர்வரவைக்கும். 
பற்றினால் உணவிற்கு, 
ருசிகூட்டும் குணமுண்டு. 
பற்றாது போயின், 
பற்றும் தீயென, 
அரசுக்கு இரணமுண்டு .

ப.சந்திரசேகரன் . 

1 comment:

  1. இரசிப்பிற்குரியது
    .................உரித்தால் உருவத்தில்
    ஒன்றும் இல்லை ;
    சுவைத்தால் சமையலில்
    சொர்க்கத்தின் எல்லை...

    ReplyDelete