Monday, March 28, 2016

பொறுப்போடு காதல் !.

என் விழிகளின் தணலைத் திருடியபோது,
வியர்த்திருக்கும் உனக்கு.
காத்திருப்பு இல்லாத காதலில்லை;
கண்டவுடன் குளிரச் செய்ய,
காணும் விழிகள்,குளிர்சாதனப் பெட்டியோ,
பருகும் பனிக்கூழோ இல்லை.
உன் பதிவுகளைப் பார்க்கிறேன்;பிடித்திருந்தால்,
மீண்டும் மீண்டும் பிரவேசித்தால்,
தணலை நானே தணியச் செய்கிறேன்; .
காத்திரு அதுவரை. காரணம்,
காத்திருப்பு இல்லாத காதல் இல்லை .
                                                                     .சந்திரசேகரன்.

No comments:

Post a Comment