Friday, March 18, 2016

திருமணம் அன்றும் இன்றும்.

திருமணம் அன்றும் இன்றும் :-
===========================
பரிசம் போடவே பந்தலுண்டாம்  அன்று ;
பந்தக்காலின்றியே பல திருமணமாம் இன்று
முதலிரவு அன்றே முதலில் பேசினர் தம்பதியர் அன்று .
முதலிரவில் கூட பேசுவதற்கு ஒன்றுமில்லையாம் இன்று     ;
மூன்று நாள் கொண்டாட்டத்  திருமணமாம்  அன்று
மூன்று விருந்துக்கே  திண்டாட்டமாம்  இன்று .
கண்டவர் கலப்பராம் திருமணப் பேச்சில் அன்று .
கூடப் பிறந்தவரே குரல்கொடுக்க யோசிப்பர் இன்று.
மெய்யோடு  சிறப்பாய், சீர்வரிசை அன்று
கையில் மொய்யோடு  நீள்வரிசை இன்று.
நட்புக்கும் உறவுக்கும் நேரம் நிறைய உண்டு அன்று .
உட்புகுந்து வெளிவரவே நேரமில்லை இன்று .
வசதியில்லா வாழ்வில் கூடுதலே மண்வாசம்;
வசதியின் வேட்டையில் பணம் ஒன்றே பேசும்.
                                                                                              .சந்திரசேகரன்.


No comments:

Post a Comment