Friday, December 16, 2022

மொழிக்கூத்து.

கறுக்கல்ல ன்னாலும்

காத்தால ன்னாலும்,

விடியல்ல ன்னாலும்

காலைப் பொழுதுதானே!

இத்தச்சோடுன்னாலும்

இம்மாம்பெருசுன்னாலும் 

அளவு அளவுதானே.

துப்புறவா இல்லேன்னாலும்

துளிகூட இல்லேன்னாலும்

இல்லாப்பாட்டுதானே.

ரவ்வோண்டுதான் இருக்குன்னாலும்,

கொஞ்சோண்டுதான் இருக்குன்னாலும்,

குறை குறை தானே!

ஆக்கம் கெட்ட கூவன்னாலும்,

கூறு கெட்ட குப்பாச்சின்னாலும்,

ஒதவாக்கரைதானே!.

கழிச்சல்ல 'போ'ன்னாலும்

காளியால 'போ'ன்னாலும்

போனா போனதுதானே.

அப்டிக்கா போனாலும் 

இப்டிக்கா போனாலும் 

போவசொல்ல வரசொல்லன்னு 

மாத்தி மாத்தி சொன்னாலும்,

எல்லாமே வழிக்கான

வாய்ச் சவடால்தானே!.

பொறக்கால வான்னாலும்,

பின்னாடி வான்னாலும்,

மறைக்கிற மார்க்கம்தான.

மொழியவச்சு கோலம்போட்டா

மூச்சுவச்ச இலக்கியம்.

மொழியவச்சு கூத்தடிச்சா,

பேச்சுவச்ச சமூகம்.

ப.சந்திரசேகரன்.

2 comments: