Sunday, May 8, 2022

பல்லக்கு

மொட்டை மாடியில் 

மல்லாந்துப் படுத்து 

வானத்தைப் பார்த்திட ,

விழிகளே வானத்து  

விந்தைகளின்  பல்லக்கு.

கெட்டியாய் மடிதனில்

குழந்தையைப் பற்றி 

கனிவுடன் கொஞ்சிட, 

தாய்மடி தருவதே 

மழலைக்கு பல்லக்கு.

அரியதாய்க் கருத்துக்கள் 

அறிவுடன் வலம்வர, 

ஆதாரம் காட்டும் 

மூளையின் மேடையே, 

அறிவிற்கு பல்லக்கு.

பெரியதாய் மானுடம் 

பேருடன் தழைத்திட ,

போரிலா வேர்களாய்

படர்ந்திடும் கருணையே, 

சமத்துவப் பல்லக்கு.

சமரசம் சார்ந்து, 

சாத்திரம் மாற்றியே,   

சமூகம் சுமக்கையில் 

ஆனந்தம் ருதல்,   

ஆன்மீகப் பல்லக்கு.

                   ப சந்திரசேகரன்   






No comments:

Post a Comment