Wednesday, April 13, 2022

சீர்மிகு சித்திரை

{இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்}


தேருடன் பிறந்திடும் மாதமே சித்திரை; 

ஊருடன் கூடுவர் உவகை பெருக்கியே! 

நீரின்றி அமையா உலகினைப் போல, 

தேரின்றி நகராது திருவிழா மாதம்.

 

ஆருடம் கூறவும் ஆசைகள் கூடவும் ,

ஓரிடம் அகன்று உலகியல் பார்வையில், 

பேரிடர் களைந்து,பெருமிதம் கொள்வும்

யார்வழிப் போயினும்,நேர்வழி நன்றாம்.  


மார்தட்டிப் பேசுதல் மானுடம் மட்டுமே; 

ஓர்முறைக் கூறுதல் உண்மை ஆகிடின், 

தீர்ப்பினில் நீதி தெறித்திடல் போல,

வார்ப்பென வாய்மை வகுத்தல்  வலுவே!

 

சீர்மிகு  சித்திரை துளிர்த்திடும் நேரம் 

சார்பிலாச்  சமூக நியாயங்கள்  தழைத்து, 

தேருலாக் காண,தெருவெலாம் திரளும்;

மார்புகள் விரிந்திட,மனப்பகை மிரளும்.  

ப சந்திரசேகரன் .


No comments:

Post a Comment