Saturday, October 24, 2020

உலகாளும் கலைவாணி




விழிகளின் விநோதமாய், 

மொழிகளின் நாதமாய், 

தொழில்களின் தோரணமாய், 

நாவின் நளினங்களாய், 

பாவின்  விளக்கங்களாய்,

விரல்நுனியின் வித்தைகளாய், 

நிரலுரைக்கும்  நிகழ்ச்சிகளாய்,

நிலமூன்றிய  நல்வாழ்வின், 

பலர்போற்றும் செயலாகி,

கலியுகத்தில் கணினியுடன்,

பலமாக  பணிதொழுது, 

குலம்வாழ,குணம் காப்போம்!

உலகாளும் கலைவாணி, 

உடனிருந்து ஒளிதருவாள். 

ப.சந்திரசேகரன் .   

1 comment: