Thursday, October 20, 2016

சொல் தோழா!

சொல்  தோழா!
வேற்று மனுஷாள் என்பவர் யார்?
வேறு கிரகங்களை சேர்ந்தவரோ?
நம்மோடு வாழ்ந்து நம்மில்  வேறுபட்டவரோ?
வேறு மதமோ இனமோ, அன்றின்
மாற்று மொழிபேசும் உரையாட இயலாதோரோ?
பழகாதவரோ பழகியும் நம்மைப் புரியாதவரோ?
பேரிடர் வருகையில் பரந்த மனதோடு
ஊருக்குத் துணையென உறுதியாய் நின்று,
தேரெனத் தோள்கொடுப்போர் அனைவரும்,
இந்த வேற்று மனுஷாள் தானே!
நட்பு  வட்டம் நலம் நாடிச் சூழ்ந்தாலும்,
மீட்புப் பணியில் மனபலம் சேர்த்திடும்
சமூகச் சொந்தம், வேற்று மனுஷாளோ?
சொல் தோழா!.  
                                        ப.சந்திரசேகரன் 

No comments:

Post a Comment