Sunday, October 2, 2016

சொல் தோழா!

சொல் தோழா!
மரணம் மகத்தானது .அழகானதும் கூட .
அதனால் தான் 'இயற்கை எய்தினார்'
'காலமானார்' என்று அழகாகச் சொல்லுவோம் .
மரணப்புன்னகையும் மரணத்திற்கு மரியாதை சேர்க்கும் .
சிவலோகப் பதவி அடைந்ததால் அல்ல அப்புன்னகை .
அவதூறும் அநியாயமும் அடர்ந்த மண்ணைவிட்டு
அகன்றதன், அகம்நிறை அற்புதமே அப்புன்னகை .
ஆனால் இன்று மரணத்திற்கே மரியாதை இல்லை.
'இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே'
என்னும் கவிதை வாக்குகள் பொய்யாகி
எங்கிருந்தாலும், சிவனே என்றிருந்தாலும்,
அங்குமிங்கும் தேடிவந்து கருணையின்றி கருவறுக்கும்
அன்பாலும் பகையாலும் அதிரடியாய் விபத்தாலும்,
ஒன்றாகிப் பலவாகும் ஓலத்தின் எதிரொலியை,
மனம்குன்றி  மரணமென்றால், மகத்தானதோ மரணம் ?
சொல் தோழா !.
                                              ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment