Sunday, October 16, 2016

மாயா!

மாயா!
மதியும் மமதையும் மனமென்றுச் சொல்லி
நதியின் எழுச்சியுடன் நரன்வலம் முடிப்போம் ;  
இதயம் துடித்தலே இதிகாசமென் றுரைத்து  
சிதறியச் சுவாசத்தில்  சிதையாய் கிடப்போம் ;.    
சதையும் எலும்பும் உதவா நிலையில்,
விதியைப் புறங்கூறி விடை பெறுகையில்,
புதையவோ  மண்ணில் விதையெனப் பதிந்து?
கதியற்று எரியவோ  கடைசிக் கனலாய்?.
எதுபொய் எதுமெய் என்றறியா வாழ்வில்,
பொதுவெனப் போற்றுதல் மாயையின் மாட்சியே.
                                                               ப. சந்திரசேகரன் .             

No comments:

Post a Comment