'கால மானார்' என்பதன் கோலம்.
காலனைத் தழுவிடும் மரண மூலமோ?
'மரண முற்றார்' என்றுக் கூறுதல்
மனதில் முற்றிய மாறா ரணமோ?
'உயிர் துறந்தா'ரென உயர்வுறக் கூறல்
துயர்வுற்ற வாழ்வின் துறவுத் தியானமோ?
'இயற்கை எய்தினார்' என இயம்புதல்,
செயற்கை தொலைத்து இயற்கை ஈன்றலோ?
'இறந்தார்' என்று எளிமைப் படுத்துதல்,
இரந்துப் பெறும் இறைவன் பாதமோ?
'செத்துப் போனார்' எனக் கதைத்தல்
சத்தாய்த் தமிழில் சாவைச் சீண்டலோ?
'சிவலோகப் பதவி' அடைந்ததாய் செப்புதல்,
சாவிலும் பதவியே, சாணக்கியத் தீர்வோ?
'அமரர்' எனுமோர் அலப்பறைப் பேச்சில்,
அதிர்ந்து அலருமோ காலனின் மூச்சு?.
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment