முத்தமிழும் செம்மொழியும்,
கொத்துக் கொத்தாய்
கொடிகளின்றிப் பூத்து,
சத்துமாவுச் சொற்களென
வித்தை பலபுரிந்து
வீறுநடை போட்டிடவே,
வித்திட்ட நாளிதுவாம்!
நித்தச் சூரியனின்
புத்தொளிப் பரவசத்தில்,
சத்தமிட்டுச் சொல்வோம் !
"திருக்குவளைத் திருநாளும்
திருக்குறளின் ஓவியமும்
திரட்டிய தீந்தமிழால்,
ஜூன் மூன்றில்,
தான் விரிந்து
வான் மிளிரும்,
வரலாற்றுக் கலைஞரின்,
வாசமிகு நினைவுகளில்!"
ப.சந்திரசேகரன்.
This comment has been removed by the author.
ReplyDeleteமிகுதியும்
ReplyDeleteபகுதியாகிறது.....
தங்களை
பாராட்டிய பின்
சொற்களின் நிலை!!