Monday, September 26, 2022

குண்டுகளும் திண்டுகளும்

திண்டுக்குக் காத்திருப்போர்

குண்டுகள் வீசுவர்,

குண்டுச் சட்டிக்குள்

குதிரைகள் ஓட்டிக்கொண்டு.

நெஞ்சின் நச்சுதனை

நெருப்பறியுமோ நீரறியுமோ?

வஞ்சகமே அரசியலின்

வாழ்நாள் கனவென்று,

படிவர்ண நிறம்போற்றி

பகைவளர்க்கும் பதர்முன்னே,

மிஞ்சாத காலமிட்டு

குண்டுகளின் புகையகலும்;

கூன்பிறையின் வெளிச்சத்தில்,

குண்டுகள் வீசியோரை

கண்டிடுவோம் தெளிவாக!.

மண்டிடும் குழப்பங்களின்

மாற்றுவழி அரசியலை,

குண்டுகட்டாய் தூக்கிவந்து

குறிவைத்து கருவறுக்கும்,

நிலமது தமிழகமாம்!.

கண்டிப்பாய் ஆள்வோர்க்கு,

குண்டுகளும் திண்டுகளும்

முண்டங்களின் முகவரியே.

ப.சந்திரசேகரன்.






2 comments:

  1. சிறப்பு... மதத்தை வைத்து மணிதர்களுக்கு மதம் பிடிக்க வைக்கும் மூடர் கூட்டத்திற்கு சரியான அடி.... அருமையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. தொடரும் தங்களின் கருத்துப்பதிவுகளுக்கு நன்றி மணிகண்டன்.

      Delete