Thursday, December 8, 2016

மாயா ! .

மாயா .
கதைகள் பலவாம் நிகழ்வுகள்பற்றி
விதைகள் விதைத்திட பயிர் விளையும்
எதை விதைப்பரோ, அதுதான் விளையுமோ
நதிகளின் புனிதமே நாட்பட கலங்கிட 
விதைத்திடா பலதும் விளையுமாம் இங்கே! . .
முதலைகள் நிறைந்த முறையிலா வாழ்வில்,
கதைகளாய் மாறிடும் கண்ணீர் துளிகள்..
சதிகள் அனைத்தும் சாதனை ஆகிடின்
பதைத்திடும் மனதின் பாபங்கள் கூடுமோ
அதுவும் இதுவுமாய் அரங்கேறும் கதைகள்
விதியெனும் குழியில் விழுந்திடக் காண்.
ப. சந்திரசேகரன்

No comments:

Post a Comment