கிழவன் மறப்பான்,
கிழமைகள் தனையே.
கிழவி அறிவளோ,
கிழவன் நிலைமை.
கழுவிடும் மீன்களில்
நழுவிடும் மீன்களென,
வழுக்கிடும் கிழமைகள்.
விழித்திரும் வேளையில்.
கழிந்த காலத்தின்
கிழமைகள் தனிலே ,
கொழித்தவை எவையோ,
கழித்தவை எவையோ!
கழித்ததும் குழித்ததும்
அழிந்து போகுமோ
அழியா மனதில் !
வழித்தடம் பலவாம்,
வாழ்வின் வீதியில்.
விழுமியம் வழுவா
பழுதிலா படிப்பினில்,
இழித்ததும் இல்லை;
பழித்ததும் இல்லை;
செழித்து வாழ்தலும்
ஒழித்து வாழ்தலும்
சுழித்ததோர் விதியோ
சூழ்நிலைக் கதியோ!
விழித்து விறைந்து
உழைத்த கிழமைகள்,
கிழவனும் அறிவான்;
கிழத்தியும் அறிவாள்.
கிழமைகள் மறப்பினும்,
பழமைகள் மாயுமோ?
முழுமையே முதுமை.
ப.சந்திரசேகரன்.
முழுமையே முதுமை. முது மையே முழுமை. 🙏🏻
ReplyDelete