Saturday, July 6, 2024

கொலை விளையும் காலங்கள்.

ஊரிலும் உலகிலும்,

யார் வாழ்வது?

யார் மடிவது?

யார் முடிவது ?

வீட்டிலும் வெளியிலும்,

பலமாய் வீதியிலும்,

பயணத்தின் பாதியிலும்,

சக்கரமாய்ச் சுழலும்

சதுரங்கக் கொலைககள்.

முற்பகல் வினைகளோ?

மூடி வைத்த பகையோ?

அரசியல் பகடையோ?

சிரசினில் சகடையோ ?

ஆதி எது,அந்தமெது,

சாதிக்கொலை சரவெடியில்!


வாரமிருக் கொலையெனில்,

பாரமது பூமிக்கே! 

குோருவது யாரிங்கே,

கொடுமைக்குத் தீர்வு?

சட்டம் தன் கடமையைச் செய்யும்,

சங்கிலித் தொடர்களை,

மங்கிடும் மறதியாய்,

மக்களுக்கு விட்டுவிட்டு!.♪

கொன்றானைக் கொல்லுவதோ,

கொல்ல நினதை்தவனை 

கொல்லநாள் குறிப்பதோ!

ஆதிக்கொலை,சாதிக்கொலை,

அத்தனையும் பெருக்கெடுத்து,

கொலை கொலையாய்ப் பிரசவிக்கும்

விளைநிலத்தின் காலமிது.

ப.சந்திரசேகரன்.



2 comments:

  1. Life is the precious gift blessed by the Grace of the Almighty to one and all of this Universe including plants and animals too.🙏🏻

    ReplyDelete
  2. அடியோடு களையப் பட வேண்டிய கொலை, அறுபத்தி ஐந்தாவது கலையாக பரிணாம வளர்ச்சியை எட்டிவிட்டது வருந்தத் தக்கது

    ReplyDelete